Tuesday, March 28, 2017

சிறுதானியங்கள்



பொதுவாக பின்வரும் தானியங்கள் சிறுதானியங்கள் என்று அழைக்கப்படுகிறது.. அவையாவன தினை, கம்பு, கேழ்வரகு, சாமை, சோளம், வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி.

கம்பு உடம்புக்கு தெம்பு 
சாமை உண்டால் ஆமை வயது 
திணை இதயத்திற்கு துணை 
வரகு உண்டால் வருங்காலம் வரவு 
குதிரை பலம் பெற குதிரைவாலி 
கேழ்வரகு சர்க்கரையே விலகு 
சோம்பல் நீக்கும் சோளம் 
பனிவரகு புற்று நோயே விலகு 

இந்த சிறுதானியங்களை வைத்து என்ன மாதிரியான உணவுகளை தயாரிக்கலாம்?

தினை அரிசியை பயன்படுத்தி  இட்லி, தோசை, பாயாசம் பண்ணலாம். சோளத்திலிருந்து சோளப்பணியாரம், தோசை செய்யலாம். கேப்பையிலிருந்து கஞ்சி, அடை பண்ணி சாப்பிடலாம். வரகரிசி சாதம் மாதிரி சமைத்து சாப்பிட நன்றாக இருக்கும். கம்பு கூழ், கஞ்சி சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லது. 

பொதுவாக சிறுதானியங்களில் இரும்பு சத்து அதிகமிருக்கும். புரதம் மற்றும் கால்சியம் அளவும் கூடுதலாகவே அமைந்திருக்கும். இதில் பீனாலிக்ஸ் என்ற மருத்துவ குணப்பொருட்கள் மிகுதியாக காணப்படும். இது நம்முடைய உடம்புக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும். 





சிறுதானியங்கள் மழை குறைவான பகுதியில் வளரக்கூடியது. இது நம் மாநிலத்திற்கு (தமிழ் நாடு) ஏற்ற பயிராகும்.