Saturday, May 6, 2017

நீடித்த ஆயுளுடன் வாழ

நாம் சில பழக்க வழக்கங்களை ஒழுங்காக கடைப்பிடித்தால் நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

அது என்ன?   


               தினம் இருமுறை
                               வாரம் இருமுறை
                                                மாதம் இருமுறை
                                                                 வருடம் இருமுறை

நம் வாழ்வில் சில விடயங்களை மேலே சொன்னபடி இருமுறை மட்டுமே கடைப்பிடித்து வந்தால் நீடித்த ஆயுளுடன் வாழலாம். 

அவை எவை எவை .................

தினம் இருமுறை - நாம் தினமும் இரண்டு வேலை மலம் கழிக்க வேண்டும். மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கலே பல நோய்களுக்கு மூல ஆதாரமாகும்.

வாரம் இருமுறை - நாம் அனைவரும் வாரம் இரண்டு தடவை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். 


ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்ப்பது என்பது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்து பின்பு வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். முக்கியமாக ரொம்ப நேரம் ஊற வைக்கக் கூடாது, அதனால் நமக்கு சளி பிடிக்கும்.

மாதம் இருமுறை - திருமணத்திற்கு பிறகு மாதம் இரண்டு முறை தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ள வேண்டும். இருமுறை என்பது அடுத்தடுத்த இரண்டு நாட்கள் இல்லை. கண்டிப்பாக 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே.

வருடம் இருமுறை - வருடத்திற்கு இரண்டு தடவை வயிறை சுத்தம் செய்ய வேண்டும். 

வயிறை சுத்தம் செய்வது என்றால் எப்படி?

பேதிக்கு மருந்து சாப்பிட வேண்டும். அதிலும் ஒரு முறையிருக்கு, அதன்படி செய்ய வேண்டும். பேதி மருந்து சாப்பிடுவதற்கு 4 நாட்களுக்கு முன்னரே நம்மளை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். 

எப்படி?  

நாம் ஞாயிற்று கிழமை பேதி மருந்து எடுத்துக் கொள்ள போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது நம்முடைய தயாரிப்பு புதன் கிழமையே தொடங்கி விடவேண்டும். புதன் கிழமை எப்பவும் போல உணவு எடுத்துக் கொள்ளலாம். வியாழக்கிழமை வேகவைத்த காய்கறிகளை மட்டுமே உண்ண வேண்டும். வெள்ளிக்கிழமை பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். சனிக்கிழமை பழச்சாறு மட்டுமே குடிக்க வேண்டும். அப்புறம் ஞாயிற்றுக்கிழமை பேதி மருந்து எடுத்துக்கொண்டு ஒன்றும் சாப்பிடக் கூடாது. அவ்வாறு இருக்க முடியாதவர்கள் அன்று இரவு பழச்சாறு எடுத்துக் கொள்ளலாம். இதே முறையைத்தான் மருந்து சாப்பிட்ட பின்பும் கடைபிடிக்க வேண்டும். அதாவது மறுநாள் (திங்கள் கிழமை) பழச்சாறு எடுத்து கொள்ளணும், செவ்வாய் கிழமை பழங்கள் சாப்பிட வேண்டும். புதன் கிழமை வேகவைத்த காய்கறிகள் சாப்பிடணும். வியாழக்கிழமை முதல் எப்பவும் போல் உணவு எடுத்து கொள்ளலாம். 

இதுவே தான் உபவாசத்திற்கும் பொருந்தும்.

நாம் அனைவரும் நம்மை இவ்வாறு பழக்கப் படுத்திக் கொள்வோமே .........

Tuesday, May 2, 2017

அசைவ உணவு உண்ணும் தாவரங்கள்


அசைவ உணவு உண்ணும் தாவரங்களைப் பற்றி அறிந்த பொழுது அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.......

நாம் பல கதைகளில் மனிதர்களை உண்ணும் தாவரங்களை பற்றி படித்திருப்போம். ஆனால் அப்படி பட்ட தாவரங்கள் இருக்கின்றன என்னும் பொழுது அதிச்சியாகத்தானே இருக்கும். 

இந்த வகையான தாவரங்களின் முக்கிய உணவே சிறு சிறு பூச்சிகள், எலிகள், வண்டுகள், தவளைகள் போன்றவையாகும். பிரபல விஞ்ஞானிகள் ஸ்டூவர்ட் மெக்பெர்சன், அலாஸ்டியர் ரொபின்சன் தலைமையில் ஆன குழு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள விக்டோரியா  மலைப்பகுதியில் உள்ள செடி கொடிகளை ஆராய்ச்சி பண்ணும்பொழுது இதை கண்டறிந்தார்கள்.


இந்த வகையான தாவரங்களை நாம் 21 ஆம் நூற்றாண்டில் தான் கண்டறிந்துள்ளோம். இந்த செடியின் இலைகள்தான் அந்த செடிக்கு வாய் போல் உள்ளது. அதன் மேல் அமரும் சிறு பூச்சிகள் மற்றும் எலி போன்ற உயிர் இனங்களை அப்படியே பிடித்து கொள்கிறது. அதன் பிறகு அவ்விலைகளில் சுரக்கும் ஒரு விதமான எண்ணெய் போன்ற பசையினால் அந்த உயிர் இனங்கள் தப்பவே முடியாது.. தாவரத்தில் சுரக்கும் எண்ணெய் போன்ற பொருள் [நொதிகள் (Enzymes - Proteases, ribonucleases, esterases, acid as well as alkaline phosphatases, phosphoamidase)] பூச்சிகளை செரிக்க செய்து அதற்கு தேவையான சத்துக்களை எடுத்துக்கொள்கிறது.

இதை படிக்கும் பொழுது உங்களுக்கும் ஆச்சரியம் வருகிறது அல்லவா ...........