Monday, August 19, 2019

தமிழ்நாடு மாவட்டங்கள்

முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆட்சியில் தமிழ்நாடு மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஜனவரி 8, 2019 முதல் ஆகஸ்ட் 15, 2019 வரை 5 புதிய மாவட்டங்கள் உருவாகி விட்டன. 7 மாதங்களில் 5 மாவட்டங்கள் உதயமாகி விட்டன, என்ன காரணம்? 

ஓட்டு அரசியலா? ஜாதி அரசியலா? அல்லது, உண்மையில் மக்களின் வசதிக்காகவா? 

எதன் அடிப்படையில் ஒரு மாவட்டத்தை இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ பிரிக்கிறார்கள்? மக்கள் தொகையின் அடிப்படையிலா அல்லது பரப்பளவின் அடிப்படையிலா?

1956 வருடம் தமிழ்நாடு மாவட்டங்களின் எண்ணிக்கை 13 ஆக இருந்தது. அப்பொழுது மக்கள் தொகை தோராயமாக 3 கோடியே 20 இலட்சம்.


மாவட்டங்கள்: 1) சென்னை 2) செங்கல்பட்டு 3) வடஆற்காடு 4) தென் ஆற்காடு 5) சேலம் 6) நீலகிரி 7) கோயம்புத்தூர் 8) திருச்சிராப்பள்ளி 9) தஞ்சாவூர் 10) மதுரை 11) இராமநாதபுரம் 12) திருநெல்வேலி 13) கன்னியாகுமரி

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய அரசாங்கத்தால் எடுக்கப்படுகிறது. அதன்படி தமிழ் நாடு மக்கள் தொகையின் விபரம் பின்வருமாறு


2011 ஆண்டுக்கு பின் வரும் விபரங்கள் அனைத்தும் தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது தமிழ் நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் ஒவ்வொரு ஆண்டும் 1.015% சதவீதத்தில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன்படி பார்த்தால் 2021 ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் மக்கள் தொகை தோராயமாக 8 கோடியே 40 இலட்சம் ஆகும். 

டாக்டர் இராமதாஸ் அவர்களின் (பாட்டாளி மக்கள் கட்சி) அறிக்கையில் 12 இலட்சம் மக்கள் தொகைக்கு 1 மாவட்டம் வேண்டும் என்று சொல்கிறார். அதன்படி பார்த்தால் 2021 ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழ் நாட்டில் மொத்தம் 70 மாவட்டங்களை உருவாக்க வேண்டும். இது சாத்தியமாகுமா?

ஏனென்றால் இப்பொழுது அரசாங்கத்திற்கு வரும் வருமானத்தில் 71% சதவீதம் அளவு அரசு வேலை செய்பவர்களின் சம்பளமாகவும், ஒய்வு ஊதியமாகவும் கொடுக்கப்படுகிறது. அப்படியென்றால் 70 மாவட்டங்கள் உருவாக்குவதற்கு இப்பொழுது அரசு வேலை செய்பவர்களின் எண்ணிக்கையில் இன்னொரு மடங்கு ஆட்களை நியமிக்க வேண்டும். ஆனால் மக்கள் தொகை அதே அளவுதான் இருக்கப்போகிறது. அரசாங்கம் எப்படி வருமானத்தை பெருக்க முடியும்? ஒரே வழி வரியை உயர்த்தி மக்கள் தலையில் கட்டுவதுதான். அதனால் இது சாத்தியமாகாது.

ஆகையால் 20 இலட்சம் மக்கள் தொகைக்கு 1 மாவட்டம் என்று மொத்தம் 42 மாவட்டங்களை உருவாக்கி நிர்வகிக்கலாம். தற்சமயம் உள்ள 37 மாவட்டங்களின் பெயர்கள், பரப்பளவு மற்றும் மக்கள் தொகை விபரம் பின்வருமாறு (புதிதாக தோன்றிய மாவட்டங்களின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை கணக்கிடப்படவில்லை)

2011 மக்கள் தொகை கணக்கு 

இந்த அட்டவணையின் படி சில மாவட்டங்களை (மக்கள் தொகை 25 இலட்சத்திற்கும் மேல்) மட்டும் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கலாம். 

எத்தனை மாவட்டங்களை உருவாக்கினாலும் அது மக்கள்நலன் சார்ந்ததாகவும், ஊழலற்ற மாவட்ட நிர்வாகம் உள்ளதாகவும் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் 38 ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 27-12-2020 அன்று பிரிக்கப்பட்டது.

நன்றி: தி ஹிந்து, இந்தியன் ஆன்லைன், விக்கிப்பீடியா, சென்சஸ் அறிக்கை