Saturday, January 30, 2016

கறிவேப்பிலை

கறிவேப்பிலை மரத்திற்கு கறிவேம்பு என்ற மற்றொரு பெயரும் உள்ளது. இம்மரத்தின் அனைத்து பாகங்களும் (இலை, பட்டை, வேர்) மருத்துவத்திற்கு பயன்படுகிறது.  கறிவேப்பிலையை நாம் தினமும் சமையலுக்கு உபயோகிக்கிறோம் ஏனெனில் அதில் அதிக நோய் எதிர்ப்பு காரணிகள் உள்ளன. 


கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முராயா கோனிகி (Murraya koenigii) என்று அழைக்கப்படும். இது ரூட்டேசியே (Rutaceae) என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் மருத்துவ குணத்திற்கு அதில் பொதிந்துள்ள பல மருத்துவ குண வேதிப்பொருட்கள் காரணம் ஆகும், அவை கரொட்டினாய்ட்ஸ் (Carotinoids - Lutein; Carotenes), அல்க்லாய்ட்ஸ் (Alkaloids - Carbazole alkaloids), வைட்டமின்கள், மணம் தரக்கூடிய டேர்பின்ஸ் (Terpenes) மற்றும் பல.





கறிவேப்பிலையை தினமும் பச்சையாக சாப்பிட்டால் வரும் பயன்கள்:

நீரழிவு நோய் 

நீரழிவு நோய் கண்டவர்கள் தினமும் 10 கறிவேப்பிலையை பச்சையாக காலை மாலை என 3 மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும். மேலும் இந்நோயால் உடல் பருமனாவதும் தவிர்க்கப்படும். சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படும் மற்றும் கண் பார்வை குறைபாடு உண்டாகும். இதை சரி செய்வதற்கு கறிவேப்பிலையை நிழலில் காய வைத்து பொடி செய்து கஷாயம் பண்ணி காலை மாலை என இரு வேளை குடித்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக வைத்திருக்க உதவும்.

கொழுப்பு சத்து 

கொழுப்பில் நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு என இரு வகைப்படும். நம் உடம்பில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமானால் அது இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீர் கோளாறுகளை உண்டு பண்ணும்.

காலையில் 15 கறிவேப்பிலையை பச்சையாக 3 மாதம் சாப்பிட்டால் வயிற்றை சுற்றியுள்ள  கொழுப்பு சத்து குறைந்து பார்ப்பதற்கு அழகான உடல் பொலிவு ஏற்படும். நம் உடம்பில் கொழுப்பு சத்து ஏற்பட முக்கிய காரணம் நாம் தற்சமயம் உபயோகப்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகும். அதனால் எண்ணெய் உபயோகப்படுத்தும் முன்பு 1 லிட்டர் சமையல் எண்ணெயில் 10 கறிவேப்பிலையை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயிலுள்ள கொழுப்பு சத்து நீங்கும்.

இரத்தச்சோகை 

இரத்தச்சோகை உள்ளவர்கள் தினமும் காலையில் பேரீச்சம் பழத்துடன் கறிவேப்பிலையை சேர்த்து உண்டால் இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்கள் அதிகமாகி இரத்தச்சோகை நீங்கும்.

நரைமுடி 

கறிவேப்பிலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வந்தால் நரைமுடி வராது மேலும் முடி உதிர்தலையும் தடுத்து நிறுத்தும்.  

கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம் ..?

கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் (Lipophilic compounds) முழுமையாக உடலில் சேரும். கறிவேப்பிலையை தாளிக்கும்போது இளஞ்சூடான எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லையெனில் அதிலுள்ள மோனோ டேர்பீன்ஸ் ஆவியாகி பலன் கிடைக்காமல் போய் விடும். 

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி1, பி2, சி மற்றும் சுண்ணாம்பு சத்தும் (Calcium), இரும்பு சத்தும் (Iron) அதிக அளவு நிறைந்துள்ளன.

தமிழ்நாடு மாநில குறியீடுகள் (State Symbols of Tamil Nadu)

இந்தியாவில் 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன.



ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியான மாநில குறியீடுகள் இருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டின் குறியீடுகள் பின்வருமாறு 






Friday, January 29, 2016

இப்படியும் திருவிழா கொண்டாடுவார்களா?

திருவிழாவின் பெயர் கானமார மாட்சூரி (Kanamara Matsuri) என்பதாகும். ஜப்பானில் இவ்விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு தமிழிலில் "ஆண்குறி விழா" என்று அழைக்கப்படுகிறது (Festival of Steel Phallus or Penis festival). இவ்விழாவின் முக்கிய நோக்கம் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பணம் சேகரிப்பதாகும். இவ்விழா ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் முதல் ஞாயிறு கிழமையில் கொண்டாடப்படும். இவ்விழாவை ஆண் பெண் இரு பாலாரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.



இதன் வரலாறு மிக சுவையானது. ஜப்பானில் ஒரு அழகிய பெண் இருந்தாள். அவள் மீது கூரிய பற்களை உடைய அரக்கன் ஆசைப்பட்டு அவளுடைய பெண் உறுப்பில் ஒளிந்து கொள்கிறான். அவளுக்கு திருமணம் நடக்கிறது. அந்நாள் இரவில் அவளுடைய கணவனின் ஆண் உறுப்பை அரக்கன் கடித்து குதறி விடுகிறான். இவ்வாறு இருமுறை நடைபெறுகிறது, அதனால் கோபமுற்ற அப்பெண் கொல்லரிடம் இரும்பினாலான ஆண் உறுப்பை செய்து கொடுக்கும்படி கேட்கிறாள். அதன்படி கொல்லரும் செய்து கொடுக்கிறார். அதை அவள் உபயோகிக்கும் பொழுது அரக்கனின் பல் உடைந்து விடுகிறது. அதன்பின் அப்பெண் வேறு திருமணம் செய்து சந்தோஷமாக இருப்பதாக கதை முடிகிறது.



இத்திருவிழாவில் ஆண் உறுப்பை போன்ற மிட்டாய்களை விரும்பி சுவைக்கிறார்கள்.

இத்திருவிழாவினால் ஜப்பானுக்கு ஒவ்வொரு வருடமும் சுற்றுலா வருவாய் அதிகரித்து கொண்டேயிருக்கிறது.

ப்ளூம் பாக்ஸ் (Bloom Box)

ப்ளூம் பாக்ஸ் (Bloom Box) என்றால் என்ன?

நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்ளும் தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தது யார்? நாமெல்லாம் பெருமையாக சொல்லக்கூடிய தமிழர் திரு கே ஆர் ஸ்ரீதர் அவர்கள் தான்.


அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் (Illinois University) பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்று அங்குள்ள நாசா (NASA) வில் வேளையில் அமர்ந்தார். அங்கு அவர்க்கு கொடுக்கப்பட்ட வேலையானது, செவ்வாய் கிரகத்தில் வாழ முடியுமா? என கண்டறிவதுதான். மேலும் வாழ்வதற்கு தேவையான பிராண வாயுவை (Oxygen) உற்பத்தி பண்ணும் தொழில்நுட்பத்தை கண்டு பிடிப்பதாகும். அந்த முயற்சியில் வெற்றியும் கண்டார். இருந்தும் அமெரிக்கா அரசாங்கம் அந்த ஆராய்ச்சியை மேலும் தொடர விரும்பவில்லை. 

ஆனால் ஸ்ரீதர் அவர்கள் தான் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை கைவிடாமல் வேறு ஆக்கப்பூர்வமான முறையில் உபயோகிக்க விரும்பினார். அதற்காக அல்லும் பகலும் உழைத்து கண்டுப்பிடித்தது தான் நமக்கான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்ளும் தொழில்நுட்பமாகும்.

இம்முறையில் மின்சாரம் எப்படி தயாரிப்பது?

ஆக்சிஜனையும் எரிசக்தியையும் நேர்மின்வாய் (Anode) மற்றும் எதிர்மின்வாய் (Cathode) வழியாக செலுத்தி குறிப்பிட்ட வெப்பத்திற்கு உட்படுத்தினால் மின்சாரம் தயாராகும். 


இந்த மின்சாரத்தை தயாரிக்க மிக பெரிய அளவில் இயந்திர தொழில்நுட்பம் தேவைபடுவதால், அதன் உற்பத்தி செலவும் அதிகரிக்கிறது. ஆனால் கம்ப்யூட்டரைப் போல இதன் விலை மிகவும் குறைய அதிக வாய்ப்பியிருக்கிறது.


இந்த முறையில் தயாரிக்கும் மின்சாரத்தால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஒரு பாக்ஸ் கிட்டத்தட்ட 10 - 12 அடி உயரமிருக்கும். இந்த ஒரு பாக்ஸின் மூலம் இந்தியாவில் 8 வீடுகளுக்கு மின்சாரம் கொடுக்க முடியும்.

இந்த தமிழருக்கு நம் அனைவரின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


Sunday, January 24, 2016

அறுசுவைகள்

பொதுவாக நாம் அறிந்த சுவைகள் ஆறு, அவை 
  1. இனிப்பு 
  2. கசப்பு 
  3. புளிப்பு 
  4. உவர்ப்பு 
  5. உறைப்பு  
  6. துவர்ப்பு 

ஒவ்வொரு சுவையும் தோன்றியது பஞ்சபூதங்களின் கலப்பாகும். அவை பின்வருமாறு 
  1. மண் + நீர் = இனிப்பு 
  2. காற்று + ஆகாயம் = கசப்பு 
  3. மண் + தீ = புளிப்பு 
  4. நீர் + தீ = உவர்ப்பு 
  5. காற்று + தீ = உறைப்பு 
  6. மண் + காற்று = துவர்ப்பு 


ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உள்ளன. 

இனிப்பு 

உடலை ஊட்டப்படுத்தி வளர்த்து பருக்க வைக்கும். இச்சுவை அளவிற்கு அதிகமானால் கபத்தை அதிகரிக்கும்; செரிமனத்தைக் குறைத்து விடும். பெரியோருக்கு மதுமேக நோயை உண்டுபண்ணும். 

கசப்பு 

கசப்பு சுவை பெரும்பாலான நோய்களுக்கு நல்லது. தாவரத்தில் இச்சுவை அதிகமிருந்தால் அதில் ஏராளமான மருத்துவ குண  வேதிப்பொருட்கள் இருக்கின்றது என்று பொருள். பித்த நோய்கள் மற்றும் கப நோய்கள் குணமாகும். மேலும் உடலில் உள்ள விஷத்தன்மையை போக்கும் குணமுடையது. கசப்பை அதிக அளவு சாப்பிட்டால் வாயுவை உண்டாக்கும்.

புளிப்பு 

புளிப்பு சுவை பித்தத்தை தூண்டி ஜீரணத்தை நெறிப்படுத்தும். காய்கறிகளை புளிச்சாற்றில் ஊற வைத்து சமைத்தால் அதிலுள்ள உயிர் சத்தும் புரதச்சத்தும் கெடாமல் இருக்கும். இச்சுவை அளவுக்கு அதிகமானால் நரம்பு தசைகள் தளரும் மற்றும் இரத்த சோகை எற்படும்.  

உவர்ப்பு 

உவர்ப்பு சுவையை குறைந்த அளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். "சிறுக அளவோடு சேர்த்துண்ண தேகத்து உறுப்பின் சுருக்கம் குறையும்" என்பது பழமொழி. அதிக அளவு சேர்த்துக்  கொண்டால் இரத்தக்கொதிப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகள் எற்படும்.

உறைப்பு 

உறைப்பு சுவை செரிமனத்தை தூண்டும்; கபத்தை போக்கும் மற்றும் உணர்ச்சியை தூண்டும். அதிக அளவு எடுத்து கொண்டால் நரம்பு தளர்ச்சியை உண்டாக்கும்.

துவர்ப்பு 

துவர்ப்பு சுவையை மருத்துவ சுவை என்று கூறுவார்கள். ஏனெனில் இது இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மையுடையது. இச்சுவை நெல்லிகனியிலும் மற்றும் வாழைப்பூவிலும் அதிகம் நிறைந்து இருக்கும்.


நம் உணவில் இந்த அறுசுவையையும் அளவோடு சமமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

NHANES - Taste and Smell Examination Component Manual
Nutrition & Food Sciences

Saturday, January 23, 2016

சீரகம்

சீரகம் (சீர் + அகம்)


அகத்தை சீர் செய்யக்கூடிய பொருள் தான் சீரகம் ஆகும். இதனுடைய பூர்வீகம் எகிப்து நாடாகும். இதன் தாவரப் பெயர் Cuminum cyminum (Umbelliferae). சீரகத்தில் இரும்பு சத்து அதிகளவில் உள்ளது. இது நம் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் என்ற பொருளிலுள்ள ஹீமுடன் (Heme) இணைந்து பிராண வாயுவை உடல் முழுவதும் எடுத்து செல்கிறது. 


இதில் டேர்பீன்ஸ் (Terpenes) என்று சொல்லக்கூடிய எஷன்ஷியல் ஆயில் (Essential oils) அதிக அளவு உள்ளது. பொதுவாக குமினால்டிஹைடு (Cuminaldehyde) மற்றும் தைமோல் (Thymol) என்ற மருத்துவ குணம் கொண்ட வேதிப்பொருள் அதிக அளவு உள்ளது. இது நம் வாயிலுள்ள உமிழ்நீர் சுரப்பி (Salivary glands) மற்றும் ஜீரண மண்டலத்தில் அமிலம் (Acids), காரம் (Bile), ஜீரண நொதிபொருளை (Digestive enzymes) சுரக்க தூண்டுகிறது.


ஒரு தேக்கரண்டி சீரகத்தை 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து (பாத்திரத்தை மூடி) பின்பு குளிர வைத்து நாள் முழுவதும் குடித்து வந்தால் ஜீரண மண்டலத்தில் எந்த பிரச்சனையும் வராது. மேலும் நம் உடல் குளிர்ச்சி அடையும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் ஆகியவை நீங்கி விடும்.

சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து, கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு விரைவில் நிற்கும்மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

சீரகத்தை வறுத்து மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி சாப்பிட்டால் மந்தம் நீங்கும்முருங்கைக் கீரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலையும் மாலையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.

சீரகத்தில் பல வகைகள் உள்ளன, அவை பெருஞ்சீரகம் (Fennel), சிறுஞ்சீரகம் (Caraway) மற்றும் கருஞ்சீரகம்.



பெருஞ்சீரகத்தின் தாவரப் பெயர் Foeniculum vulgare என்றும், சிறுஞ்சீரகத்தின் தாவரப் பெயர் Carum carvi என்றும் அழைக்கப்படுகிறது. இவை இரண்டும் Umbelliferae என்ற குடும்பத்தை சேர்ந்தது. பெருஞ்சீரகத்தில் Anethole என்ற வேதிப்பொருளும், சிறுஞ்சீரகத்தில் Carvone என்ற வேதிப்பொருளும் அதிக அளவு உள்ளன.


இப்பொருள்கள் அனைத்தும் நம் வீட்டு சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் மிக முக்கிய இடம் பிடித்திருக்கும்.

Saturday, January 16, 2016

டெங்கு (டெங்கி) காய்ச்சல்

டெங்கு (டெங்கி) காய்ச்சல் (Dengue Fever), DENV என்று அழைக்கக்கூடிய வைரஸினால் ஏற்படக்கூடியது. இது நான்கு உள்வகை (Subtypes: DENV-1, DENV-2, DENV-3 & DENV-4) பிரிவுகளை உடையது. பொதுவாக இது ப்ளேவிவைரஸ் (Flavivirus) என்று அழைக்கக்கூடிய ப்ளேவிவிரிடே (Flaviviridae) குடும்பத்தை சேர்ந்தது. இக்காய்ச்சல் மலேரியாவைப்போல கொசுக்களினால் பரவக்கூடியது. இக்கொசு ஏடெஸ் இஜிப்டி (Aedes aegypti) என்று அழைக்கப்படுகிறது. இது  சுத்தமான தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.

டெங்கு (டெங்கி) காய்ச்சலுக்கு இதுவரை  ஆங்கில மருத்துவத்தில் மருந்து எதுவுமில்லை. பொதுவாக  எந்த வைரஸ் நோய்க்கும் மருந்து கிடையாது. ஆகவேதான் தடுப்பு மருந்து பிறந்தது முதல் கொடுக்கப்படுகிறது. பிறகு எப்படி சித்த மருத்துவத்தில் குணப்படுத்தப்படுகிறது?


டெங்கு (டெங்கி) காய்ச்சல் ஆசியா மற்றும் ஆப்ரிக்கா கண்டங்களில் அதிக அளவு காணப்படுகிறது.


இக்கொசு, டெங்கு (டெங்கி) காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து இரத்தத்தை உறிஞ்சி உட்கொண்டு பின்பு சாதாரண நபர்களை கடிக்கும் பொழுது, கொசு இரத்தத்திலுள்ள வைரஸ், கடி படுபவரின் இரத்தத்தில் கலந்து விடுகிறது..


சித்த மருத்துவத்தில் டெங்கு (டெங்கி) காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் மிக அருமருந்தாகும். இது ஒன்பது மூலிகைகளை உள்ளடக்கியது.

நிலவேம்பு (Andrographis paniculata)
வெட்டிவேர் (Vetiveria zizanioides)
விலாமிச்சை வேர் (Plectranthus vettiveroides)
சுக்கு (Zingiber officinale)
மிளகு (Piper nigrum)
கோரைக்கிழங்கு (Cyperus rotundus)
சந்தனம் (Santalum album)
பற்படாகம் (Mollugo cerviana)
பேய்புடல் (Trichosanthes cucumerina)

சித்த மருந்து கடையில் நிலவேம்பு குடிநீர் பொடி கிடைக்கிறது. ஒரு தேக்கரண்டி அளவு பொடியை 200 மிலி அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் அளவு 50 மிலி வந்தவுடன் இதை வடிகட்டி 10 - 50 மிலி அளவு குடிநீரை பெரியவர்கள் குடிக்க வேண்டும். 5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் 15 மிலி அளவு குடிக்க வேண்டும். 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் 5 - 10 மிலி அளவு குடிக்க வேண்டும். குடிநீர் தயாரித்த 3 மணி நேரத்தில் உபயோகித்து கொள்ள வேண்டும். நிலவேம்பு குடிநீரை சாப்பாட்டுக்கு முன் குடிப்பது மிகவும் சிறந்தது.

மூலப்பொருட்களின் நன்மைகள்:

நிலவேம்பு - முக்கிய மூலப்பொருள், காய்ச்சலை குணமாக்கும் வேதிப்பொருள் மிகுந்து இருக்கிறது, வைரஸ் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.

கோரைக்கிழங்கு, பற்பாடகம் - காய்ச்சலை குணப்படுத்தும்.

பேய்ப்புடல் - குடலில் தங்கியுள்ள மாசுக்களை வெளியேற்றும்.

சுக்கு, மிளகு - உடலில் சுரக்கும் நொதிகளை சீராக்கும்.

வெட்டி வேர், விலாமிச்சை வேர், சந்தனம் - ஜுரத்தால் ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும்.

Dengue Fever - Pitha Suram
NIS - Dengue & Chikun Gunya
WHO - Dengue Fever

Thursday, January 14, 2016

தமிழக நதிகள் இணைப்பு

தமிழக நதிகளை இணைப்பது குறித்து, திரு வி.பொன்ராஜ் அவர்களின் ஆராய்ச்சி கட்டுரை


தமிழக நீர்வழிகள் சாலைத் திட்டம் புதுமையாக முன்மொழியப் பட்டுள்ளது. இது நீர் சேகரிப்பாகவும் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைப்பாகவும் இணைந்து செயல்படுகிறது. இருவழிகளில் நீர் செல்லவும் ஆற்றுப் படுகைகளுக்கிடையில் ஏற்கனவே உள்ள அமைப்புகளின் மீது, பாதிப்பின்றி இணைப்புகளை மேற்கொள்கிறது.
பின்வரும் அணைகளை இணைக்கிறது: சாத்தனூர், மேட்டூர், பவானி சாகர், வைகை, மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, சோலையாறு, பாபநாசம், சேர்வலாறு. அத்துடன் பல ஏரிகளையும் பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், வீராணம், ராமநாதபுரம் ஏரிகளையும் இணைக்கிறது.
மேற்கு நோக்கி பாயும் ஆறுகளும் தமிழக நீர்வழி கிரிடில் இணைக்கப்படுகிறது. ஒரே கிடைமட்டத்தில் வரும்படியாக இது கடல் மட்டத்துக்கு மேல் 250 மீட்டர் உயரத்தில் கட்டப்படும். இணைப்பின் எந்தப் பகுதியிலிருந்தும், நீரை ஏற்றவோ, இறக்கவோ முடிகிற வகையில் அணைகளையும், ஏரிகளையும் இது இணைக்கிறது. ஆறுகள் முழுவதுமே, தமிழக நீர்வழிப் பாதையுடன் இணைக்கப்படுகின்றன.
இந்த திட்டத்தை, ஐந்து கட்டங்களாக நடைமுறைப்படுத்த முடியும்.
  • முதல் கட்டத்தில், மேட்டூரும், வைகையும், 350 கி.மீ., நீள நீர்வழியால் இணைக்கலாம்.
  • இரண்டாம் கட்டத்தில், மேட்டூரையும், பாலாறையும், 270 கி.மீ., தூரத்தில் இணைக்கலாம்.
  • மூன்றாம் கட்டத்தில், 130 கி.மீ., நீள வழியில், வைகையையும், தாமிரபரணியையும் இணைக்கலாம்.
  • நான்காம் கட்டத்தில், தாமிரபரணியையும், பெருஞ்சாணியையும் இணைக்கலாம்.
  • ஐந்தாம் திட்டமாக, சம காலத்தில், ஆறுகளையும், ஏரி, -துணை ஆறுகளையும், ஆங்காங்கே இணைக்க வேண்டும்


இந்த திட்டத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், இது, அந்தந்த படுகைகளில் பயன்படுத்தப்படும் நீரை இணைப்பதில்லை; மாறாக உபரி நீரைமட்டுமே இணைக்கிறது. அதுவும், இரு வழிகளில் இணைக்கிறது. இதில் எங்கும், நீரேற்றும் வசதி பயன்படுத்தப்படவில்லை
பலன்கள்
திறமையான வெள்ளக் கட்டுப்பாடு; 75 லட்சம் ஹெக்டேருக்கு நீர்ப்பாசன வசதி; 2,150 மெகாவாட் நீர்மின்சக்தி; நிலத்தடி நீர் மட்ட உயர்வால், ஆண்டுக்கு, 1,350 மெகாவாட் மின்சக்தி மிச்சமாதல்; சரக்குப் போக்குவரத்துக்காக, 900 கி.மீ., நீள நீர்வழித்தடம்; 30 அடி ஆழமும், 360 அடி அகலமும் உள்ள நீர்வழியில், ஆண்டு முழுக்க போக்குவரத்து நடக்கலாம்; சாலைகளோடு ஒப்பிடுகையில், நீர்வழிப் போக்குவரத்துக்கான எரிபொருளில், 90 சதவீதம் மிச்சமாகும்; அத்துடன் நீர்வழி கிரிடிலிருந்து, 5 கோடி பேருக்கு, நேரடி குடிநீர் இணைப்பைச் சாத்தியமாக்கலாம்; மீன்வளர்ப்பு, சுற்றுலா, நீர் விளையாட்டுகள் என, பல கூடுதல் வாய்ப்புகள் இருக்கின்றன.
நன்றி: தினமலர் 

Tuesday, January 12, 2016

தொட்டா சிணுங்கி (Mimosa pudica)



தொட்டா சிணுங்கி செடியின் இலையை தொட்டவுடன் அது உடனே மூடிக்கொள்ளும், கொஞ்ச நேரம் கழித்து தானாக திறந்து கொள்ளும். அதை பார்ப்பதற்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இந்த செயல் தொட்டா சிணுங்கி தாவரத்தின் தனி சிறப்பாகும். இதற்கு காரணம் தான் என்ன?

இச்செயலுக்கு காரணம், இத்தாவரத்தில் இருக்கும் இரண்டு மிக முக்கிய வேதிப்பொருளாகும், அவை 
  1. மிமோபுதின் (Mimopudine) 
  2. பொட்டாசியம் உப்பு உள்ள க்ளுகோபைரனோசில் ஜென்சேட் (Potassium 5-O-beta-D-glucopyranosylgentlsate)
மிமோபுதின் (Mimopudine) என்ற வேதிப்பொருள் இலையை திறப்பதற்கும், பொட்டாசியம் உப்பு உள்ள க்ளுகோபைரனோசில் ஜென்சேட் (Potassium 5-O-beta-D-glucopyranosylgentlsateஎன்ற வேதிப்பொருள் இலையை மூடுவதற்கும் உதவுகிறது.


மருத்துவ  குணங்கள்:

தொட்டா சிணுங்கி, சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த நோய்களுக்கு அருமருந்தாகும். சர்க்கரை நோய்க்கு தோட்டா சிணுங்கி இலைச்சாறு 30 மி.லி. வீதம் காலை மாலை என்று இருவேளைக்கு இரண்டு மாதம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். இரத்த அழுத்தத்திற்கு 15 மி.லி. வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.

தொட்டா சிணுங்கி செடியின் வேரை பொடி செய்து பாலில் கலந்து இரண்டு மாதம் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். தொட்டா சிணுங்கி செடி முழுவதையும் தண்ணீர் விட்டு அரைத்து (மாவு மாதிரி), அதை வெள்ளை துணியில் வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலி மற்றும் வீக்கம் குணமாகும். மாவு மாதிரி அரைத்ததை அப்படியே புண்ணில் தடவினால் நாள்பட்ட புண் குணமாகும்.

தூக்கமின்மை நோய்க்கும் இச்செடி நல்ல மருந்தாகும். 5.0 கிராம் அளவு இச்செடியின் இலையை கொதிக்க வைத்து இரவு நேரத்தில் 2 - 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை நோய் (Insomnia) குணமாகும்.

ஃபினீயல் சுரப்பி vs தொட்டா சிணுங்கி

ஃபினீயல் சுரப்பி (Pineal Gland) பெருமூளையின் (Cerebrum) அடிப்பாகத்தில் அமைந்துள்ள நாளமில்லா சுரப்பியாகும் (Endocrine gland). இச்சுரப்பி மெலடோனின் (Melatonin) என்ற இயக்குநீரை (Hormone) சுரக்கிறது. இது நம் உடலில் உயிரியல் கடிகாரத்தை (Biological Clock) சீராக வைத்திருக்க உதவுகிறது. அதாவது, மெலடோனினின் வேலையானது ஒரு நாளில் மனிதனை இரவு - பகல் என்று அது அதுக்குரிய வேலையை செய்ய ஞாபகப்படுத்துகிறது (Circadian Rhythm). பொதுவாக தூங்கும் முறையை ஒழுங்கு படுத்துகிறது. இதன் அளவில் ஏதாவது பிரச்சனை என்றால் தூக்கம் வருவதிலும் பிரச்சனை வரும்.


சித்தர்கள் தங்கள் உடலை பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்வதற்கு இச்சுரபிதான் மிக முக்கிய காரணமாகும். பிரபஞ்ச சக்தியை ஆழ்நிலை தியானம் மற்றும் தவத்தின் மூலம் பெற்று பல வருடங்கள் வாழ்ந்துள்ளார்கள்.


அப்படியான ஆழ்நிலை தியானத்தின் போது இச்சுரபி "டைமெத்தில் ட்ரிப்டமைன் (N,N-dimethyltryptamine) என்ற வேதிப்பொருளை சுரக்கிறது. பொதுவாக இவ்வேதிப்பொருள்  உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பொருளாகும். ஏனென்றால் இதை உட்கொண்டால் நம் மனநிலையை ஏகாந்த நிலைக்கு கொண்டு செல்லும்.


இவ்வேதிப்பொருள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் திசுக்களை புதுப்பிக்கவும் உதவுவதாக விஞ்ஞானிகள் 2014 ஆம் ஆண்டு கண்டுபிடித்துள்ளார்கள். இவ்வேதிப்பொருள் இயற்கையாகவே தொட்டா சிணுங்கி செடியின் வேர் பகுதியில் நிறைந்துள்ளது. ஆகவே முறையாக இச்செடியின் வேர் பகுதியை சாப்பிட்டால் நமக்கு டைமெத்தில் ட்ரிப்டமைன் (N,N-dimethyltryptamine) குறைவில்லாமல் கிடைக்கும். இவ்வேதிப்பொருள் நம் உடலில் சேர்வதற்கு முன்பே சில நொதிப்பொருளின் (Enzyme) மூலம் ஜீரணம் ஆகி வெளியேறிவிடும். ஆகையால் முறையாக சாப்பிட வேண்டும்.

மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் தற்பொழுது உள்ள நுகர்வு கலாசாரத்தில் நாம் உபயோகிக்கும் பல பொருட்கள் இச்சுரபியை அழித்துக் கொண்டு வருகிறது. முக்கியமாக பற்பசையில் உள்ள ஃபுளோரைடு (Fluoride) வேதிப்பொருள் ஒரு காரணியாகும். இச்சுரபியானது ஃபுளோரைடு வேதிப்பொருளை தன்னிடத்தில் உறிஞ்சி கொள்வதனால் இதன் செயல்பாடு குறைந்து கொண்டே வருகிறது.

Monday, January 11, 2016

எலுமிச்சை பழம்




எலுமிச்சை பழத்திற்கு தேவக்கனி என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஆனால் சித்தா நூலிலிருந்து அறியப்படுவது என்னவென்றால் "எலி" எல்லா பழங்களையும் கடித்து விடும், ஆனால் எலுமிச்சையை மட்டும் தொடவே தொடாது. எனவே எலி மிச்சம் வைத்த பழம் "எலிமிச்சை", அது மருவி "எலுமிச்சை" ஆகியிருக்கும்.

எலுமிச்சையின் புளிப்பு சுவைக்கு காரணம் அதிலிருக்கும் சிட்ரிக் அமிலமாகும். மேலும் வைட்டமின் "சி" (அஸ்கார்பிக் அமிலம்) அதிக அளவில் இருக்கிறது. இது நம் உடல் "இரும்பு சத்தை" உட்கிரகிக்க உதவுகிறது. நாம் ஹோட்டலில் சில சமயம் சிக்கன் ப்ரை (அ) சிக்கன் 65 ஆர்டர் செய்வது வழக்கம். சிக்கனுடன், எலுமிச்சை பழத்துண்டையும் சேர்த்து கொடுப்பார்கள், ஏன்? 



ஏனெனில் சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின்-சி தேவை. ஆகையால் சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின்-சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டுச் சாப்பிட வேண்டும்.



Saturday, January 9, 2016

தூங்கும் முறை

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும்தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். 

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று 

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை 
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை 
நம்பிக் காண்

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, உடலில் சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல் போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.


எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாக கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு 
ஓங்குயிர் தெற்கு 
மத்திமம் மேற்கு 
மரணம் வடக்கு 

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது 
தெற்கு திசையில் தலை வைத்து படுத்தால் ஆயுள் வளரும் 
மேற்கு திசையில் தலை வைத்து படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும் 
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது 

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும்போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் தேவையான பிராண வாயு உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுத்து தூங்கக் கூடாது.


இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்க வேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் உடலுக்கு தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச் செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப்போய் விஷமாக நேரிடும்.

ரூபாயின் குறியீடு

மதிப்பிற்குரிய திரு உதயகுமார் அவர்களால் உருவாக்கப்பட்டது


Friday, January 8, 2016

மரம் நடு - படித்ததில் பிடித்தது

நீ  சந்தோஷமாக இருக்கும்போது வாழை மரத்தை நடு 
         நீ  துக்கமாக இருக்கும்போது புங்கை மரத்தை நடு
நீ  வெற்றியடையும்போது தேக்கு மரத்தை நடு
        நீ  தோல்வியடையும்போது பூவரசம் மரத்தை நடு
உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் கொய்யா மரத்தை நடு 
        உன் தாய் தந்தைக்காக ஆலம் மரத்தை நடு
உன் சந்ததி மகிழ்ச்சியாக இருக்க தென்னை மரத்தை நடு 
        உன் வீட்டில் இடமிருந்தால் முடிந்தவரை மரம் நடு 

மித்ரவருண சக்தி - படித்ததில் ஆச்சரியப்பட்டது

அகத்தியர் அருளிய சமஸ்கிருதப் பாடல் (அகத்திய சம்கிதம்)

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே 
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி 
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ் 
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ 
மித்ரவருணசங்கியதம்"

விளக்கம் 

"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருணசக்தியைப் பெறலாம்"

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் மற்றும் மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிரித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.



குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிஷம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.