Friday, November 30, 2018

மூக்கிரட்டை (Boerhaavia diffusa)


மூக்கிரட்டை கொடியினத்தை சேர்ந்த கீரை வகையாகும். இது நமது ஊரில் புல்வெளிகளிலும், வயல் வெளியிலும் படர்ந்து வளர்ந்து இருப்பதை காணலாம். இதனுடைய தாவரவியல் பெயர் போரோவியா டிஃபியூசா (Boerhaavia diffusa).  

மூக்கிரட்டை பற்றிய அகத்தியர் குணபாடம் 

"சீத மகற்றுந் தினவடக்குங் காந்திதரும் 
வாத வினையை மடிக்குங்காண் பேதி
கொடுக்குமதை உண்டாக்காற் கோமளமே! பித்தம்
அடுக்குமே மூக்கிரட்டையாய்…"    

மூக்கிரட்டை சீதள நோய்களை அகற்றும், தினவு என்கிற நமைச்சலைப் போக்கும், உடலுக்கு அழகை தரும், வாதத்தால் (காற்றால்) உண்டாகும் நோய்களை அழிக்கும், ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப் போக்கும், பித்தமும் அதிமாகும். ஆகையால் ஒவ்வொரு மருந்துக்கும்  பக்கவிளைவுகள் உள்ளது என்பதால் அளவோடு சாப்பிட வேண்டும்.

மூக்கிரட்டையின் வேர் அதிகமான மருத்துவ குணங்களை கொண்டது. மேலும் இதனை சமூலமாகவும் உபயோகப்படுத்தலாம்.

மூக்கிரட்டை கசாயம் 

நிழலில் உலர வைக்கப்பட்ட வேரை (10 கி) தண்ணீரில் (200 மிலி) நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் அளவு 100 மிலி யாக வந்தவுடன் கசாயத்தை ஆற வைத்து வடிகட்டி பருக வேண்டும். காலை மாலை இரு வேளையாக 20 மிலி அளவு உணவுக்கு முன்பு குடிக்க வேண்டும். 

இவ்வாறு செய்து வந்தால் உடலில் ஏற்பட்ட தைராய்டு பிரச்சனை குணமாகும். உடல் பருமன் குறையும் மேலும் தொப்பையை குறைக்கும். சிறுநீரக கல்லை வெளியேற்றுவதற்கு இது அருமருந்தாகும். இரத்த சோகையை போக்கி இரத்த ஓட்டத்தை சரி செய்யும்.

இத்தனை பயன்களுக்கும் முக்கிய காரணம் இதில் பொதிந்து இருக்கும் மருத்துவ குண வேதிப்பொருட்கள் ஆகும்.



Wednesday, October 31, 2018

ஒற்றுமைக்கான சிலை (Statue of Unity)


இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் மதிப்புக்குரிய திரு. சர்தார் வல்லப்பாய் படேல் ஆவார். அவருடைய பிறந்த தினம் அக்டோபர் 31, 1875. இன்று அவருடைய 143-வது பிறந்த தினம். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர். அப்போது நம் இந்தியாவில் 500 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. அவை அனைத்தும் குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தன. இவருடைய சீரிய முயற்சியால் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு "இந்தியா" என்ற நாடானது. அதனை நினைவு கூறும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டது தான் உலகிலேயே உயரமான "ஒற்றுமைக்கான சிலை".

இந்த சிலை குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றங்கரையிலுள்ள சர்தார் சரோவர் அணையின் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 597 அடி (182 மீட்டர்) யாகும். உலகிலேயே உயரமான சிலை என்ற அந்தஸ்து பெற்றுள்ளது. இது கட்டடக்கலையின் திறமைக்கு மிகப்பெரிய சான்றாகும். இந்தியாவின் தலைசிறந்த சிற்பி பத்மபூஷன் திரு ராம் வி. சுதர் அவர்களும், பொறியாளர்களும் இணைந்து பணியாற்றி இச்சாதனையை செய்து உள்ளனர். 


சர்தார் சிலையின் முகத்தை பார்க்கும் பொழுது எத்தனை கடினமான வேலையை எவ்வளவு அழகாக, சிறப்பாக மிக குறுகிய காலத்தில் செய்து முடித்து உள்ளார்கள் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது. இந்த சிலையை செய்ய 70,000 மெட்ரிக் டன் சிமெண்ட், 18500 மெட்ரிக் டன் எஃகு,  6000 மெட்ரிக் டன் இரும்பு, 1700 மெட்ரிக் டன் வெண்கலம் உபயோகப்படுத்தப்பட்டு 250 பொறியாளர்கள் மற்றும் 3700 பணியாளர்கள் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவு சுமார் 3000 கோடியாகும். 

அரசியல் காரணங்கள் பலவாக இருந்தாலும் இந்த கட்டடக்கலையின் சிறப்புக்கு நாம் தலைவணங்க வேண்டும் மற்றும் பெருமைப்பட வேண்டும்.



நன்றி: விகடன்

சிற்பி: ராம் வி. சுதர் 


கட்டடக்கலைக்கு ஒரு சல்யூட்!

Saturday, October 27, 2018

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் சொன்னது


மூளைக்கு வல்லாரை 
முடிவளர நீலிநெல்லி 
ஈளைக்கு  முசுமுசுக்கை 
எலும்பிற்கு இளம்பிரண்டை! 

பல்லுக்கு வேலாலன் 
பசிக்கு சீரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி!  

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம் 
தோலுக்கு அருகுவேம்பு!

நரம்புக்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சித்தும்பை
உரத்திற்கு முருங்கைபூ
ஊதலுக்கு நீர்முள்ளி! 

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்!

உடலுக்கு எள்ளெண்ணெய்
உணர்ச்சிற்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டு!

கருப்பைக்கு அசோகப்பட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகு! 

விந்திற்கு ஓரிதழ்தாமரை  
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை!

  கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்கு மணத்தக்காளி!

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீர்
வேர்க்குருவிற்கு பனைநுங்கு
வெட்டைக்கு சிறுசெருப்படை!

தீப்புண்ணுக்கு குங்கிலியவெண்ணெய்
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணுக்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரியெட்டி! 

குருதிக்கழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை!

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்   
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை 
ஆண்மைக்கு பூனைக்காலி!

வெண்படைக்கு பூவரசு கார்போகி 
விதைநோயா கழற்சிவிதை 
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி 
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு!

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்கு வெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பு!  

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளமயக்க கஞ்சாகள்ளு
உடலிளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே!

அருந்தமிழர் வாழ்வியலில் 
அன்றாடம் சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!


நன்றி: WhatsApp

பன்றிக்காய்ச்சல் (Swine Flu)

பன்றிக்காய்ச்சல் நோயை ஆங்கிலத்தில் ஸ்வைன் ப்ளூ (Swine Flu) என்று அழைப்பார்கள். இந்த நோயுக்கு H1N1 என்ற வைரஸ் தான் காரணமாகும். இது முதலில் பன்றியை தாக்குகிறது. பன்றியின் மூலம் மனிதனுக்கு பரவுவதால் இந்நோயை பன்றிக்காய்ச்சல் என்று கூறுகிறோம். 

நோய்க்கான அறிகுறிகள்

பசியின்மை, மூக்கு ஒழுகுதல், தும்மல், இருமல், தொண்டை வறட்சி, மூட்டு வலி மற்றும் வயிற்றுப்போக்கு.


நோய் பரவும் முறை 


நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.


ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி வளர்ப்பவர்கள், அதற்கு உணவு கொடுத்த பின்பு உங்கள் கைகளை நன்றாக கழுவ வேண்டும். வீட்டு விலங்குகள் வளர்க்கும் இடங்களில் உணவு உட்கொள்ளக்கூடாது. நோய் அறிகுறி தெரிந்தவர்களிடம் மிகவும் கவனத்துடன் பழக வேண்டும்.

நோய் குணமாக்கும் வழிகள் 

ஆங்கில மருத்துவ முறை 

வரும் முன் காப்பது: ப்ளூ வேக்சின் (Flu Vaccine) எடுத்துக் கொள்வது (ஆண்டுக்கு ஒரு முறை)
வந்த பின்பு குணமாக்குவது: டமிப்ளூ (Tamiflu) என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. இம்மருந்தை மருத்துவர் ஆலோசனையின்படி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.


சித்த மருத்துவ முறை 

வரும் முன்பு காப்பது 

சித்த மருத்துவத்தில் "கபசுர குடிநீர்" கொடுக்கப் படுகிறது. இது 15 மூலிகைகள் கொண்ட மருத்துவ கலவையாகும். சித்தா மருந்தகத்தில் இம்மருந்து பொடியாக கிடைக்கிறது. இப்பொடியை 2.6 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி 300மிலி வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்பு ஆற வைத்து, வடிகட்டி நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை வீதம் 5 நாட்களுக்கு பருக வேண்டும். இப்படி குடித்து வந்தால் நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். 

மூலிகைகள்: நிலவேம்பு (Andrographis paniculata), கண்டுபரங்கி (Clerodendrum serratum), சுக்கு (Dried ginger), திப்பிலி (Piper longum), லவங்கம் (Syzygium aromaticum), ஆடாதொடா வேர் (Justicia adhatoda), சிருக்கன்கொரி (செந்தட்டி) வேர் (Tragia involucrata), சீந்தில் (Tinospora cardifolia), கற்பூரவள்ளி (Anisochilus carnosus), கோரைக்கிழங்கு (Cyperus rotundus), கோஷ்டம் (Cheilocostus specious), அக்கரகாரம் (Anacyclus pyrethrum), வட்டத்திரிப்பி வேர் (Sida acuta), முள்ளி வேர் (Hygrophila auriculata) மற்றும் கடுக்காய் தோல் (Terminalia chebula)

வந்த பின்பு காப்பது 
  1. கண்டங்கத்திரி (Solanum xanthocarpum), சுக்கு (Dried ginger) மற்றும் வில்வ இலை (Aegle marmelos) மூன்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க (decoction) வைக்க வேண்டும். பிறகு இந்த கசாயத்தை ஆற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை வீதம் 8 நாட்களுக்கு சாப்பிட வேண்டும்.
  2. நன்னாரி (Hemidesmus indicus), தூதுவளை (Solanum trilobatum), செந்தட்டி (Tragia involucrata), ஆடாதொடா (Justicia adhatoda), கடுக்காய் (Terminalia chebula), நெல்லிக்காய் (Gooseberry), தாந்திரிக்காய் (Terminalia bellirica), சுக்கு (Dried ginger), சிசுவேர் (Oldenlandia umbellata) மற்றும் ஆடுதின்னாப்பாலை (Aristolochia bracteolata) ஆகிய அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க (decoction) வைக்க வேண்டும். பிறகு இந்த கசாயத்தை ஆற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை வீதம் 8 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் கபசுரம் குணமாகும்.

Wednesday, June 6, 2018

பவள மல்லிகை (பாரிஜாதம்)


பவளமல்லி சிறுமர வகையை சார்ந்த தாவரமாகும். இதனை பாரிஜாதம் என்றும் அழைப்பார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த தாவரம் பல நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. குறிப்பாக வழுக்கை அல்லது பூச்சி வெட்டுதல்,  அதிகப்படியான நரம்பு வலி (Sciatica), மூலம், குடற்புழுக்களை வெளியேற்றல் மற்றும் மலச்சிக்கலுக்கு அருமருந்தாகும். இதன் தாவரவியல் பெயர் நிக்டன்தெஸ் ஆர்போர்டிரிஸ்டிஸ் (Nyctanthes arbor-tristis), ஓலியேசியே (Oleaceae) குடும்பத்தை சேர்ந்ததாகும். 

இதன் இலை, மரப்பட்டை(Bark), விதை அனைத்தும் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. 

விதை - தண்ணீர் விட்டு அரைத்து விழுது போல் எடுத்து தலையில் தடவி வந்தால் வழுக்கை குணமாகும். 

இலை - கசாயம் செய்து 5 - 10 மிலி குடித்து வந்தால் அதிகப்படியான நரம்பு வலி (Sciatica) குணமாகும். குடற்புழுக்களை வெளியேற்றவோ அல்லது மலச்சிக்கலுக்கோ 10 - 15 மிலி அருந்த வேண்டும். 

மரப்பட்டை - ஆஸ்துமா நோயுக்கு மரப்பட்டை பொடியை (1 - 2 கி) வெற்றிலை சாறுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

அனைத்து மருத்துவ குணநலன்களுக்கும் இதில் உள்ள ஈறிடாய்டு க்ளைக்கோசைடு (Iridoid glycosides) என்ற மருத்துவகுண கலவைகளே காரணமாகும். அவையாவன பின்வருமாறு 




நிபா வைரஸ் (NiV) தொற்று நோய் முதன்முதலில் மலேசியாவில் கெம்பங் சுங்காய் என்ற இடத்தில் 1998 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது வௌவால் மூலம் பரவும் நோயாகும். வௌவால் கடித்த பழங்களை (பேரீச்சம் பழம்) சாப்பிடுவதால் இந்த நோய் பரவுகிறது. இது மனிதர்களையும் விலங்குகளையும் தாக்குகிறது. முக்கியமாக பன்றிகளையும், குதிரைகளையும் தாக்குகிறது. நோயின் அறிகுறிகள் பொதுவாக காய்ச்சல், மூச்சு திணறல், மூளை காய்ச்சல் ஏற்படும். இது எளிதில் பரவக்கூடிய உயிர் கொல்லி நோயாகும். இதற்கு இதுவரை தடுப்பு ஊசி கண்டுபிடிக்க படவில்லை.


நிபா வைரஸ் நோயிலிருந்து காப்பாற்றிக்கொள்ள தினமும் (1 வாரம்) பவளமல்லி கசாயத்தை ஒரு வேளை அருந்தி வந்தால் நல்லது. நோய் கண்டவர்கள் தினமும் 3 வேளை அருந்த வேண்டும்.

கசாயம் செய்யும் முறை 

பவளமல்லி இலை 5 - 6 எடுத்து 200 மிலி தண்ணீரில் போட்டு காய்ச்ச வேண்டும். தண்ணீரின் அளவு 100மிலி ஆக வரும்வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின்பு ஆற வைத்து, வடிகட்டி அதனுடன் 4 அல்லது 5 சொட்டு எலுமிச்சை பழச்சாறை சேர்த்து பருக வேண்டும்.

Thursday, March 29, 2018

பூவரசு


சிறுவயதில் பூவரசு மரத்தின் இலையை சுருட்டி பீப்பீ ஊதி விளையாடி திரிந்தது தான் ஞாபகத்திற்கு வருகிறது. அதுபோல், கிராமங்களில் பெண்கள் மார்கழி மாதம் அதிகாலையில் வீட்டிற்கு முன்பு சாணம் கரைத்து நீர் தெளித்து, கோலம் போடுவார்கள். பிறகு அந்த கோலத்தின் நடுவில் மாட்டு சாணத்தை உருட்டி பிள்ளையார் பிடித்து அதில் பூவரசு மரத்தின் பூவை வைத்து கோலத்தின் நடுவில் வைப்பார்கள். அதை பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும். 

இந்த மரத்தின் தாவரவியல் பெயர் தெஸ்பீசியா பாபுல்னியா [Thespesia populnea (L)].

பூவை ஏன் வைத்தார்கள் என்பது தெரியாது ஆனால் இந்த மரத்தின் இலை, பூ, காய், விதை மற்றும் பட்டை அனைத்தும் மருத்துவ குணம் உடையது.

இலை, பூ - பொதுவாக விஷத்தை முறிக்கும் தன்மையுடையது. அதனால் சித்த மருத்துவர்கள் இதன் இலை மற்றும் பூவை பூச்சிக்கடி, விஷ வண்டுக்கடிக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். பூவரசு இலையை அரைத்து சொறி, சிரங்குக்கு பற்று போட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காய் - பூவரசு காயை இடித்து சாறு பிழிந்தால் லேசான பிசுபிசுப்புடன் மஞ்சள் நிறத்தில் பால் போன்று சாறு வரும். இதை தேமல் உள்ள இடங்களில் தடவி வந்தால் நாளடைவில் தேமல் மறைந்து போகும். படர்தாமரை என்று சொல்லக்கூடிய தோல் நோயும் குணமாகும். கை கால் மூட்டு வலிக்கு அருமருந்தாகும்.

பட்டை - பூவரசு மரத்தின் வேர் பட்டையை எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு இந்த 50 மிலி தண்ணீருடன் 10 மிலி விளக்கெண்ணெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பேதி உண்டாகும். இதன் மூலம் தோல் நோயிலிருந்து விடுதலை பெறலாம். செதில் செதிலாக உதிரக்கூடிய சோரியாசிஸ் நோய்க்கு பூவரசம் பட்டை நல்ல மருந்தாகும்.

பூவரசு காய், செம்பருத்தி பூ, பழுத்த பூவரச இலை, இவற்றை சேர்த்து அரைத்து தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு புண் ஏற்பட்டால் ஆறவே ஆறாது. இதற்கு பூவரசு பட்டை சிறந்த மருந்தாகும். பட்டையை நீர் சேர்த்து கொதிக்க வைத்து பிறகு ஆறிய பின்பு அந்த தண்ணீரை ஊற்றி கழுவி வர புண் குணமாகும்.

ஞாபகம் மறதி நோயுக்கும் இது நல்ல மருந்தாகும்.

இத்தனை நோயுக்கும் அருமருந்தாகும் இந்த மரத்தில் பின்வரும் மருத்துவ குண வேதிப்பொருட்கள் உள்ளன. இது செஸ்க்யூடெர்பின் (Sesquiterpenes) என்ற வகையை சேர்ந்தது. 




பூவரசு மரம் அதிக அளவு பிராணவாயுவை உற்பத்தி செய்யும் மரங்களில் ஒன்றாகும்.

பூவரசு
டாக்டர் சிவராமன்

Monday, January 1, 2018

கழற்சிக்காய்


கழற்சிக்காய் பொதுவாக காடுகளில் வளரக்கூடியது. நம் நாட்டில் வேலியோரங்களிலும், புதர்களிலும் காணப்படும் ஒரு கொடி ஆகும். இக்கொடியில் முட்கள் நிறைந்திருக்கும். இதன் காய்க்குள் இருக்கும் விதை வைரத்தைப் போன்று மிகவும் கடினமாக இருக்கும். இதன் விதை பல மருத்துவக் குணங்களை உள்ளடக்கியுள்ளது. அவை 
  1. காய்ச்சலைக் குறைக்கும்.
  2. மலேரியா காய்ச்சலுக்கு அருமருந்தாகும்.
  3. கல்லீரல், மண்ணீரல் வீக்கத்தைக் குறைக்கும்
  4. சர்க்கரை நோயுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
உபயோகிக்கும் முறைகள்:

கழற்சிக்காயை உடைத்து உள்ளிருக்கும் விதை (பருப்பு) யை உடைத்து பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். கால் தேக்கரண்டி பொடியுடன் சிறிது பெருங்காயம், அரை டம்ளர் மோர், கொஞ்சம் உப்பு சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் 48 நாள் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும், வயிற்றுப புண்கள் ஆறும், வாயுவை வெளித்தள்ளும்; விரைவாதம் குணமாகும். 

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இது மிகவும் முக்கிய மருந்தாகும்.

4 பங்கு அளவு கழற்சிக்காய் விதைப்பொடி 1 பங்கு மிளகுப்பொடி எடுத்து நன்கு கலந்து ஒரு புட்டியில் போட்டு வைத்துக்கொள்ளவும். இதிலிருந்து தினமும் 1 தேக்கரண்டி அளவு 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும். கர்ப்பப்பை பிரச்சனைகளையும் குணமாக்கும் வல்லமை உடையது.

யானைக்கால் நோயுக்கும் இந்த மருந்தை பயன்படுத்தலாம். உடம்பில் எதிர்ப்பு சக்தியை வளர்க்கக் கூடியது.

இத்தனை மருத்துவக் குணங்களுக்கும் காரணம் இதில் பொதிந்துள்ள மருத்துவக் குணப்பொருட்கள் ஆகும், அவை



கழற்சிக்காய் குணங்கள்