Sunday, April 17, 2016

ஓம் (AUM)


இந்து தர்மத்தில் கூறுவது என்னவென்றால் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முப்பெரும் காரியங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் தொழிலாகும். அதுபோல் "ஓம்" மந்திரத்திலுள்ள அகார, உகார, மகாரங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிக்கும்.

ஓம் என்று ஒலிக்கும்போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன. வாயின் பின்புறம் உதிர்க்கும் "அ" என்ற ஒலி சுவாச அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் "உ" மார்புப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குவிந்த உதடுகளில் வழியே வரும் "ம" தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஓம் என்ற ஒலிப்பதன் மூலம் பிராண ஆற்றல் உடல்  முழுவதும் பாய்கிறது. இதை ஆராய்ச்சியாளர் அனில் குர்ஜர் உடல்கூறு மருத்துவ சோதனை மூலம் நிரூபித்துள்ளார். இவரது ஆராய்ச்சின் முடிவில் "ஓம்" என்று ஒலிப்பதின் மூலம் கீழ்கண்ட பயன்கள் ஏற்படுவதை கண்டறிந்துள்ளார்.
  1. மன அழுத்தம் குறைகிறது 
  2. கவனக்குவிப்பு அதிகரிக்கிறது 
  3. உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது.

மூலாதாரத்தில் 256 ஹெர்ட்ஸும், சுவாதிதானத்தில் 288 ஹெர்ட்ஸும், மணிபூரகத்தில் 320 ஹெர்ட்ஸும், அனாகதத்தில் 341.3 ஹெர்ட்ஸும், விசுத்தியில் 384 ஹெர்ட்ஸும், ஆக்கினையில் 426.7 ஹெர்ட்ஸும், துரியத்தில் 480 ஹெர்ட்ஸும் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்துள்ளது.

OM (AUM) Chant Effect
ஓங்காரம் - சுவாமி வேதாத்திரி மகரிஷி
SPB OM Chanting

No comments: