Showing posts with label Benzoin. Show all posts
Showing posts with label Benzoin. Show all posts

Friday, June 30, 2017

சாம்பிராணி



தமிழ்நாட்டில் சாம்பிராணியின் உபயோகம் பலவாக உள்ளது. பொதுவாக நம் வீட்டில் பூஜையின் போது சாம்பிராணி புகை போடும் பழக்கம் உள்ளது, அதுபோல் குழந்தைகள் குளித்த பின்பு தாய்மார்கள் சாம்பிராணி புகை போடுவார்கள். 

இவ்வாறு செய்வதினால் என்ன பயன்கள்?
  1. சாம்பிராணி மிகச்சிறந்த வாசனை பொருள்; இதன் புகை நம்முடைய மனத்தை சாந்தப்படுத்துகிறது, அதனால் தெய்வ வழிப்பாட்டில் மிகவும் உபயோகிக்கப்படுகிறது 
  2. குழந்தைகளுக்கு சளி பிடிப்பதை தவிர்க்கிறது, அதனால்தான் குழந்தை குளித்த பின்பு சாம்பிராணி புகை காட்டப்படுகிறது.
  3. சித்த மருத்துவத்தில் வாத நோய்க்கு அருமருந்தாகும். சாம்பிராணியை நல்லெண்ணெயில் நன்றாக காய்ச்சி தேய்த்து வந்தால் வாத நோய் குணமாகும். 
  4. ஆயுர்வேத மருத்துவத்தில் சளியால் ஏற்படும் தலைவலியை குணமாக்க உதவுகிறது. ஏலக்காய், மஞ்சள், சாம்பிராணி, வாய்விளங்கம் மற்றும் நாயுருவி விதை, இந்த ஐந்து பொருட்களையும் நன்கு இடித்து வைத்துக்கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு வெள்ளை துணியில் இட்டு பென்சில் போல் சுருட்டிக்கொள்ள வேண்டும். ஒருமுனையில் 1 அல்லது 2 சொட்டு நல்லெண்ணெய் விட்டு கொளுத்த வேண்டும்; எரியும் பொழுது தீயை அணைத்துவிடவும். அப்பொழுது புகை அதிகம் வரும், அந்த புகையை சுவாசித்தால் சளியுடன் கூடிய மூக்கடைப்பு போய் தலைவலி நிற்கும்.
சாம்பிராணியில் உள்ள மருத்துவகுணப் பொருட்கள்