Showing posts with label Chloroquine. Show all posts
Showing posts with label Chloroquine. Show all posts

Wednesday, January 6, 2016

இஞ்சி

இஞ்சி என்பதற்குஇஞ்சுதல்என்பதுதான் பொருள்அதாவது மழை பெய்தபின் கொஞ்ச நேரத்தில் தண்ணீர் பூமியில் இஞ்சி விடும் என்று சொல்வது வழக்கம் (நீரை உள்ளிழுத்தல்).


இஞ்சி பொதுவாக பல மருத்துவ குணங்களை  கொண்டுள்ளது.
  1. அதிகத் தாகம் எடுக்கும்போது, ஒரு துண்டு இஞ்சியை வாயிலிட்டு அடக்கிக்கொண்டால், தாகம் தீரும்.
  2. குடல், இரைப்பை முதலிய உறுப்புகளின் கழிவுகளை நீக்கும் வல்லமை பெற்றது.
  3. இரைப்பை, கல்லீரலை வலுவாக்கும்.
  4. பித்தம் மற்றும் அது சம்பந்தமான நோய்களை நீக்கி, ஜீரணத்தை எளிதாக்கும்.
  5. உலர்ந்த இஞ்சி, ‘சுக்குஎனப்படும். சுக்கு கஷாயம் ஒரு வலி நீக்கும் மருந்தாகும்.

இஞ்சியில் இருக்கும் மருத்துவகுண வேதிப்பொருட்கள் மஞ்சளில் உள்ள மருத்துவ வேதிப்பொருட்களின் ஒத்த தன்மையில் இருக்கும்.


இஞ்சி மற்றும் மஞ்சள் இரண்டிலும் மிக அபரிமிதமான மருத்துவ குணங்கள் உள்ளன. இருந்தும், இதை அடிபடையாகக் கொண்டு எந்த ஆங்கில (Allopathy) மருந்தும் சந்தைக்கு வரவில்லை ஏன்?

உதாரணத்திற்கு மலேரியாவிற்கு கண்டுப்பிடித்த குளோரோகுயின் (Chloroquine) என்ற மருந்தைப் பற்றி பார்ப்போம்.

சின்கோன அஃபிசினாளிஸ் (Cinchona officinalis) என்ற மரப்பட்டையிலிருந்து க்யூனைன் (Quinine) என்ற வேதிப்பொருள் பிரித்தெடுக்கப்பட்டது. இந்த மருத்துவகுண வேதிப்பொருள் மலேரியாவை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதை ஆதாரமாக கொண்டு குளோரோகுயின் (Chloroquine) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.