Showing posts with label Dehradun. Show all posts
Showing posts with label Dehradun. Show all posts

Tuesday, August 1, 2017

இக்காலத்து திரௌபதி - ஒரு ஆச்சரியம்


ரஜோ வர்மா (வயது 23) மிகவும் ஆச்சரியப்படுத்திய பெண் ஏனென்றால் இவர் 5 சகோதர்களை மணந்து கொண்டவர். இவர் டெஹ்ராடூன் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கிறார். 


இனிய குடும்பம்: கணவர்கள் (புஜ்ஜு வர்மா (35), சந்த் ராம் வர்மா (31), கோபால் வர்மா (29), குட்டு வர்மா (24), தினேஷ் வர்மா (22) 

இச்செய்தியை காணும் பொழுது நமது இதிகாசம் மகாபாரதம் திரௌபதியை தான் நினைவூட்டுகிறார். மகாபாரதம் போற்றுவதற்கு உரியது என்றால் ரஜோ வர்மா செய்ததும் சரியே!

ஆனால் இதற்கு முக்கிய காரணம், இக்கிராமத்தில் ஆண்கள் பெண்கள் விகிதம் சரி சமமாக இல்லை. இங்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பதே அரிது. மேலும் இவர்கள் குடும்பம் சகிதமாக சிறு சிறு நிலப்பரப்பில் விவசாயம் செய்து பிழைப்பவர்கள். அதனால் விளைநிலங்களை பிரிக்காமல் ஒன்றாக சேர்ந்து விவசாயம் செய்வார்கள். இக்கிராமத்தில் பல குடும்பங்களில் இதுபோல் ஒரு பெண் 2 அல்லது 3 சகோதர்களை திருமணம் செய்து குடித்தனம் பண்ணுவது சகஜமாக இருக்கிறது.



இவர்களுக்கு அழகான ஒரு குழந்தை உள்ளது. ஒரே ஒரு நெருடல் என்னவென்றால் இக்குழந்தையின் உண்மையான தந்தை யார் என்று தெரியவில்லை, இதை ரஜோ வர்மாவே சொல்லியிருப்பது தான்.

இக்குடும்பம் வாழ்க பல்லாண்டு!!