Showing posts with label Heart attack. Show all posts
Showing posts with label Heart attack. Show all posts

Tuesday, April 25, 2017

ஒரே மருந்து பல நோய்களுக்கு


ஒரே மருந்து பல நோய்களை குணப்படுத்தும் என்று கேட்டவுடன் மிகவும் ஆச்சரியமாக உள்ளதா ......

ஆம் ...உண்மைதான் ....

ஆனால் நம்முடைய பழமொழி "வரும் முன் காப்பதே மேல்" என்பதற்கு ஏற்ப முன்னாடியே எடுத்துக்கொண்டால் மிகவும் நல்லது.

எவ்வாறு தயாரிப்பது?

வெந்தயம் - 250 கிராம் 
ஓமம் - 100 கிராம் 
கருஞ்சீரகம் - 50 கிராம் 

மேலே உள்ள பொருட்களை சுத்தம் செய்து தனித்தனியாக வாணலியில் வைத்து இளஞ்சூட்டில் வறுத்து பின்பு ஆற வைத்து அப்புறம் பொடி பண்ணிக்கொள்ள வேண்டும். பொடி பண்ணிய பிறகு மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை காற்று புகாத கண்ணாடி குடுவையில் வைத்து கொள்ளவும். இதுவே ஆகச் சிறந்த மருந்து.

எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?

இரவு நேரத்தில் ஒரு தேக்கரண்டி அளவு வெது வெதுப்பான தண்ணீரில் (ஒரு டம்ளர் அளவு) போட்டு குடிக்க வேண்டும். இதை அருந்திய பிறகு எதுவும் சாப்பிடக்கூடாது.

சாப்பிடுவதினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

இதை தொடர்ந்து சாப்பிடுவதால் நம் உடலிலுள்ள நச்சுக்கள் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப் படுகிறது. 
  1. தேவையற்ற கொழுப்பு நம் உடம்பிலிருந்து வெளியேற்றப் படுகிறது.
  2. இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டம் ஏற்படுகிறது.
  3. இரத்த குழாய்களில் உள்ள அடைப்பு நீக்கப்படுகிறது மற்றும் இதயம் சீராக இயங்குகிறது.
  4. தோல் சுருக்கம் குறைந்து சருமம் மினுமினுப்படைகிறது.
  5. எலும்புகள் உறுதியடைந்து தேய்மானம் நீங்குகிறது.
  6. ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பல் உறுதி தன்மை அடைகிறது.
  7. கண்பார்வை தெளிவாகிறது.
  8. முடி நன்றாக வளர்ந்து கூந்தல் அழகு பெறுகிறது.
  9. நினைவாற்றல் கூடுகிறது.
  10. மலச்சிக்கல் நீங்குகிறது; மலச்சிக்கலே பல நோய்களுக்கு காரணி.
  11. கேட்கும் திறனை கூட்டுகிறது.
  12. மாதவிடாய் சம்பந்தமான நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
  13. பாலியல் சம்பந்தமான பிரச்சனைகள் நீக்கப்படுகிறது.
  14. நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
  15. இரண்டு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட நோய்கள் அனைத்தும் குணமாகிறது.
  16. செரிமாணம் சம்பந்தமான நோய்களும் குணப்படுத்தப் படுகிறது.