Showing posts with label Odisha. Show all posts
Showing posts with label Odisha. Show all posts

Wednesday, August 31, 2016

இந்தியா


இந்த கார்ட்டூன் திரு சிராஜ் காசிம் என்பவரால் வரையப்பட்டது. இது ஒடிசா மாநிலத்தில் நடந்த சம்பவம், திரு தானா மாஜி என்பவருடைய மனைவி இறந்த பிறகு உடலை 10 கிலோமீட்டர் தூக்கிக் கொண்டு நடந்தே வந்திருக்கிறார். ஏனெனில் அவருக்கு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டுள்ளது, மேலும் அவர் ஏழை மலைவாழ் குடிமகன். இந்த செய்தியை படித்த வலியின் காரணமாக வரையப்பட்டது.

நன்றி: சிராஜ் காசிம் 

அய்யோ பதறுதுங்க
அடிவயிறு எரியுதுங்க
பொய்யா நெசமான்னும்
புத்திக்கு வெளங்கலங்க

கட்டுனவ செத்துப்போனா
காரியந்தான் செய்வாங்க
பொட்டலமா தூக்கிக்கிட்டா
பொடிநடையா போவாங்க?

பெத்த மக அழுதுகிட்டே
பேசாம நடக்கயில
கத்தியழ ஒருத்தருமே
கடுகளவும் நெருங்கலயே

பொட்டியில காசிருந்தா
போயிருப்பா கவுரமா
துட்டில்லா புருசனுக்கும்
தோள் வலியக் கொடுக்காம

என்னங்க நாடு இது
எழவெடுத்த ஆட்சி இது
பொட்டுன்னு போனாலும்
பொத குழியும் கிடைக்காம

போறது பொருளா? உசுரா?
புரிஞ்சிக்க முடியலைங்க
பாரத மாதாவான்னு
பிரிச்சிப்பாத்து வெளியிடுங்க!

நன்றி: யுவபாரதி