Showing posts with label Ministers. Show all posts
Showing posts with label Ministers. Show all posts

Friday, October 13, 2017

அறிஞர் அண்ணாதுரை மந்திரிசபை


அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக மார்ச் 6, 1967 முதல் பிப்ரவரி 3, 1969 வரை இருந்தார். அப்பொழுது அவருடன் சேர்த்து மொத்தம் 10 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டார்கள்.


சட்டசபையின் சபாநாயகராக திரு சி பா ஆதித்தனர் அவர்களும் துணை சபாநாயகராக திரு புலவர் க கோவிந்தன் அவர்களும் இருந்தனர்.


ஆளுநராக மதிப்புக்குரிய திரு சர்தார் உஜ்ஜல் சிங் அவர்கள் இருந்தார்.


திரு அண்ணா அவர்கள் 10 அமைச்சர்களை தன்னுடைய அமைச்சரவையில் வைத்து கொண்டு நல்லாட்சியை கொடுத்தார். ஆனால் இப்பொழுது 33 அமைச்சர்களை கொண்டு முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சியை நடத்த திணறிக்கொண்டு இருக்கிறார். யார் எப்பொழுது தன்னுடைய அமைச்சரவையை கவிழ்த்து விடுவார்களோ என்ற பயத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்திக்கொண்டு இருக்கிறார். ஆட்சிக்கு முட்டுக்கட்டை கொடுப்பதற்கு திரு பன்னீர்செல்வம் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவியை கொடுத்து புது அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறார்.

வாழ்க தமிழ் நாடு! 

ஒரு செய்தி 

திரு NV நடராசன் அவர்களின் புதல்வர் திரு NVN சோமு 1996 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தி மு க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மதிப்பிற்குரிய பிரதமர் திரு தேவகவுடா அவர்கள் அமைச்சரவையில் இராணுவத்துறையின் இணை அமைச்சராக பணியாற்றி உள்ளார். ஆனால் துரதிஷ்டமாக நவம்பர் 14, 1997 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலியானார். அப்பொழுது மதிப்பிற்குரிய திரு IK குஜ்ரால் அவர்கள் பிரதமராக இருந்தார்.

திரு NVN சோமுவின் மகள் திருமதி டாக்டர் கனிமொழி சோமு அவர்கள் தி மு க வின் மருத்துவ அணி செயலாளராக தற்பொழுது உள்ளார்.


ஒரு கேள்வி 

தி மு க உருவானதற்கு 5 தலைவர்களே முக்கிய காரணம், அவர்கள் திரு அண்ணாதுரை, திரு நெடுஞ்செழியன், திரு EVK சம்பத், திரு மதியழகன், திரு NV நடராசன், இவர்களை தான் ஐம்பெரும் தலைவர்கள் என்று அழைப்பார்கள். இப்படி வரலாறு இருக்கும் போது எப்படி திரு கலைஞர் கருணாநிதி அவர்கள் தி மு க வின் தலைவரானார்?

அறிஞர் அண்ணாவின் கோட்பாடு 

கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு 

அறிஞர் அண்ணாவின் ஆங்கில புலமை 

அமெரிக்காவில் உள்ள யேல் (Yale) பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் பொழுது மாணவர்கள் நிறைய கேள்வி கேட்டனர். அதில் ஒரு மாணவர் because என்ற வார்த்தை தொடர்ந்து 3 மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியத்தை சொல்லச் சொன்னார். திரு அண்ணா அவர்கள் சற்றும் தாமதிக்காமல் நொடிப் பொழுதில் சொன்னார் 

"No sentence ends with because because because is a conjunction"

என்ன புலமை ஆங்கிலம் மொழியில் ....!

Sunday, September 25, 2016

பொன் முட்டையிடும் வாத்து

மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதல்வர் திரு ஜெயலலிதா அவர்கள் 22-09-2016 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் இரவு 10.15 க்கு சேர்க்க படுகிறார். 

  
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இரவு 1.00 மணிக்கு முதல்வர் அவர்களின் உடல்நிலை குறித்து செய்தி வெளியிடுகிறது. இதை கேட்டவுடன் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருக்கும் அனைவரும் இரவு 1.05 மணி முதல் மருத்துவமனை முன்பு திரளாக குவிகிறார்கள். அவர்கள் அனைவரும் அன்று இரவு மற்றும் மறுநாள் முழுவதும் மருத்துவமனை கதவின் முன்பு காத்திருக்கிறார்கள். கடவுளின் அருளால் நமது முதல்வர் உடல்நலம் பெற்று ஆரோக்கியமாக இருக்கிறார்.


படம்: நன்றி விகடன்

நமது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பாசத்தை கண்டவுடன் உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சு. இதே பாசத்தை நமது விவசாயிகளிடமும், மக்களிடமும் காண்பித்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அவர்களுக்கு தெரியாத என்ன? நமது முதல்வர் அவர்கள் அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் "பொன் முட்டையிடும் வாத்து" என்று! முதல்வர் மட்டும் இல்லையென்றால் அமைச்சர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் "செல்லா காசு"!

வாழ்க நமது அமைச்சர்களின் அளப்பரிய சேவை!

மக்கள் மத்தியில் இன்னொறு விதமான எண்ண ஓட்டமும் உள்ளது. இந்த காய்ச்சல் உண்மையான காய்ச்சலா? இல்லை சொத்து குவிப்பு வழக்கில் வரும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முன்னாடியே ஏற்படுத்திக் கொண்ட நாடகக் காய்ச்சலா? அல்லது உண்மையிலேயே முதல்வர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறாரா?

ஆண்டவனுக்கே வெளிச்சம்!!

நம் மதிப்பிற்குரிய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் டிசம்பர் 5 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.