Tuesday, January 31, 2017

ஜாதிக்காய்


ஜாதிக்காயின் (Nutmeg) தாவரப்பெயர் மிருஷ்டிகா ப்ராக்ரன்ஸ் (Myristica fragrans) என்று அழைக்கப்படும். இது உறைப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டதாகும். இதில் விதை பகுதி மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. மருத்துவ குணத்திற்கு அதில் பொதிந்துள்ள வேதிப்பொருள்கள் காரணம் ஆகும். இது பொதுவாக பீனோலிக்ஸ் (Phenolics) மற்றும் லிக்னான்ஸ் (Lignans) வகையை சேர்ந்ததாகும்.


மருத்துவ பலன்கள் 
  1. விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். 
  2. இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும்.
  3. வாயுத்தொல்லை மற்றும் அஜீரணத்தை போக்கும். இதற்கு ஜாதிக்காய்,, சுக்கு தூள் சம அளவு, சீரகம் இரண்டு பங்கு எடுத்து பொடி செய்து உணவுக்கு முன் மூன்று சிட்டிகை அளவு சாப்பிட வேண்டும்.
  4. ஒரு சிட்டிகை அளவு சாதிக்காய் தூளை 1 டம்ளர் பசும்பாலில் கலந்து இரவில் பருகினால் மன அழுத்தம் குறைந்து சீரான தூக்கம் ஏற்படும். 

Monday, December 26, 2016

தாம்பூலம் மருத்துவ குணங்கள்


தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்ந்தது ஆகும். இதை ஆங்கிலத்தில் Betel leaf, betel nut and slaked lime (CaO + water) என்று சொல்வார்கள்.  

வெற்றிலை 
வெற்றிலையில் உள்ள மருத்துவ குண பொருட்கள் 

பாக்கு
பாக்கில் உள்ள மருத்துவ குண பொருட்கள்



சுண்ணாம்பு

(CaO + water) = Ca(OH)2

வெற்றிலையின் மருத்துவ குணங்கள் 
  1. டையாஸ்டேஸ் (Diastase) என்ற பொருள் வெற்றிலையில் அதிகம் உள்ளது. இது ஸ்டார்ச் போன்ற பொருளை செரிக்க உதவுகிறது.
  2. நம் வாயில் உமிழ்நீரை அதிகம் சுரக்க செய்கிறது. உமிழ்நீரில் உள்ள நொதிகள் கிருமி நாசினியாகவும், உணவை செரிமானம் பண்ணவும் உதவுகிறது.
  3. உடல் பருமனை குறைக்கவும் உதவி புரிகிறது. ஒரு வெற்றிலை உடன் சில மிளகு துண்டுகளை சேர்த்து 2 மாதங்கள் உண்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
  4. தாய்ப்பாலை சுரக்கவும் பயன்படுத்தப் படுகிறது. ஒரு இலையை எண்ணெயில் ஊற வைத்து மார்பகங்களின் வெளிப்புறத்தில் வைக்க வேண்டும்.
பாக்கின் மருத்துவ குணங்கள்
  1. மலச்சிக்கலை போக்கும். மலத்துவாரத்தில் உள்ள புண்களை குணப்படுத்தும்.
  2. பற்களில் கசியும் இரத்தத்தை போக்கும்.
சுண்ணாம்பின் மருத்துவ குணங்கள் 
  1. எண்ணெய் பதார்த்தங்களின் செரிமானத்திற்கு உதவுகிறது.
  2. பாக்கில் உள்ள மருத்துவ குண பொருட்களை வெளிக்கொணர உதவுகிறது.
  3. ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுகிறது.
  4. பற்களை உறுதியுடன் வைத்துக் கொள்கிறது.
தாம்பூலம் பயன்படுத்தும் முறை

ஒரு பெரிய வெற்றிலையின் பின்புறத்தில் சிறிதளவு சுண்ணாம்பை தடவிக்கொள்ள வேண்டும். அதனுடன் மிகச்சிறிய அளவு பாக்கை சேர்த்து, மடித்து வாயில் வைத்து நன்றாக மென்று உமிழ்நீரை விழுங்க வேண்டும். தாம்பூலத்தில் உள்ள இந்த மூன்று பொருட்கள் நம் உடலில் உள்ள முக்குணமான வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றையும் சரியான விகிதத்தில் சமன் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. 

Friday, November 25, 2016

எட்டு போடு

எட்டு போட்டால் நோய் விட்டு போகும் 


இது ஒரு நடை பயிற்சி !

நம்முடைய வீட்டில் முன்னாடி எல்லாம் நம் பெற்றோர்கள் ஒரு எட்டு போயிட்டு வா என்று சொல்லி கேள்விப் பட்டிருப்போம். அதனுடைய அர்த்தம் இதுதான் .....

இந்த பயிற்சி பண்ணுவதற்கு 10 அடி இடம் தேவைப்படும். இதை வீட்டிலோ அல்லது வெட்ட வெளியிலோ பண்ணலாம். படத்தில் உள்ளது போல் எட்டு வடிவத்தில் குறித்துக்கொண்டு நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இப்பயிற்சியை ஒரு நாளைக்கு இரு வேளை செய்ய வேண்டும்., குறைந்தது 30 நிமிடம் பண்ண வேண்டும். முதல் 15 நிமிடம் தெற்கிலிருந்து வடக்காகவும் அடுத்த 15 நிமிடம் வடக்கிலிருந்து தெற்காகவும் நடக்க வேண்டும். 

இப்பயிற்சியை முறையாக செய்து வந்தால் நம் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து நம்முடைய ஐம்புலன்களும் நன்றாக வேலை செய்யும். 

பயிற்சியை செய்து பலன் பெறுங்கள்!

Figure 8 walking exercise
Figure 8 walking exercise - Video
Figure 8 walking exercise - Video

Tuesday, October 4, 2016

யோஷினோரி ஓசுமி (Yoshinori Ohsumi) - நோபல் பரிசு 2016 (மருத்துவம்)


யோஷினோரி ஓசுமி, 2016 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெறுகிறார். இவருடைய ஆராய்ச்சி மனித உடலில் செல்கள் எவ்வாறு பிரிகிறது? தன்னுள் அமைந்துள்ள பொருட்களை எப்படி மறுசுழற்சி செய்துகொள்கிறது என்று ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளார். இந்த கண்டுபிடிப்பின் மூலம் புற்றுநோய், பார்க்கின்சன், நீரழிவு போன்ற நோய்களுக்கான காரணம் மற்றும் அதற்கான நிவாரணம் குறித்து அறிந்து கொள்ள முடியும்.   

இவருடைய ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம் ஈஸ்ட்டை (Yeast) பயன்படுத்தி தன்னைத்தானுண்ணல் (Autophagy) செயல்முறையை கண்டுபிடிப்பது மற்றும் அதனுடைய (ATG) குறியீட்டு மரபணுக்களை (Genes) அடையாளம் காண்பது அதன்மூலம் நோய்க்கான காரணத்தை கண்டறிந்து அதை குணப்படுத்துவது என்பதாகும். அதில் இவர் வெற்றியும் கண்டுள்ளார்.





வாழ்த்துக்கள்!

Tuesday, September 27, 2016

கற்பூரவள்ளி


கற்பூரவள்ளி சித்த மருத்துவத்தில் "கற்ப மூலிகை" என்று அழைக்கப்படும். இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இந்த மருத்துவ பயன்களுக்கு காரணம் அதில் பொதிந்துள்ள வேதிப்பொருட்களே ஆகும். இவை டெர்பினாய்ட்ஸ் (Terpenoids) என்ற வகையை சேர்ந்ததாகும்.


சித்தர்கள் அகத்தியர் மற்றும் தேரையர் இந்த மூலிகையை பற்றி பாடல்களாக வடித்துள்ளனர். அவை 

காச இருமல் கதித்தம சூரியயையம் 
பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் வீசுசுரங் 
கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்
கற்பூர வள்ளிதனைக் கண்டு 
(அகத்தியர் குணபாடம்)   

கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின
நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே 
(தேரையர் குணபாடம்)  

குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். அப்போது கற்பூரவள்ளி இலையை பிழிந்து சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு (Palm Sugar) கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் குணமாகும்.


இம்மூலிகை காச நோய்க்கு அருமருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறெடுத்து அதனுடன் தேன் (Honey) கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறையும்.

ஆகையால் நம் வீட்டில் கற்பூரவள்ளியை வளர்த்து அதனுடைய மருத்துவ பயனை அடைவோம்.