Showing posts with label Tridosha. Show all posts
Showing posts with label Tridosha. Show all posts

Sunday, September 10, 2017

சித்த மருத்துவத்தில் சிறுநீர் சோதனை



சித்த மருத்துவத்தில் சிறுநீர் சோதனை பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்....

காலையில் எழுந்தவுடன் கழிக்கும் சிறுநீரை ஒரு கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டு உற்றுப் பாருங்கள்.
  • எண்ணெய் துளி பாம்பு போல் நெளிந்து காணப்பட்டால் உங்களுக்கு வாதம் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
  • எண்ணெய் துளி மோதிரம் போல் வட்டமாக காணப்பட்டால் உங்களுக்கு பித்தம் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
  • எண்ணெய் துளி முத்து போல் அப்படியே நின்றால் உங்களுக்கு கபம் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
அதுபோல்
  • எண்ணெய் துளி வேகமாக சிறுநீரில் பரவினால் நோய் விரைவில் குணமாகும் 
  • எண்ணெய் துளி அப்படியே நின்றால் நோய் குணமாகத் தாமதமாகும்.
  • எண்ணெய் துளி கீழே அமிழ்ந்தால் நோய் குணமாகாது என்று புரிந்து கொள்ளலாம்.

இதுமாதிரி சிறுநீரின் நிறம் மற்றும் மணம் ஆகியவற்றின் மூலம் நோயின் தன்மையை அறிந்து கொள்ளலாம்.

Monday, December 26, 2016

தாம்பூலம் மருத்துவ குணங்கள்


தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்ந்தது ஆகும். இதை ஆங்கிலத்தில் Betel leaf, betel nut and slaked lime (CaO + water) என்று சொல்வார்கள்.  

வெற்றிலை 
வெற்றிலையில் உள்ள மருத்துவ குண பொருட்கள் 

பாக்கு
பாக்கில் உள்ள மருத்துவ குண பொருட்கள்



சுண்ணாம்பு

(CaO + water) = Ca(OH)2

வெற்றிலையின் மருத்துவ குணங்கள் 
  1. டையாஸ்டேஸ் (Diastase) என்ற பொருள் வெற்றிலையில் அதிகம் உள்ளது. இது ஸ்டார்ச் போன்ற பொருளை செரிக்க உதவுகிறது.
  2. நம் வாயில் உமிழ்நீரை அதிகம் சுரக்க செய்கிறது. உமிழ்நீரில் உள்ள நொதிகள் கிருமி நாசினியாகவும், உணவை செரிமானம் பண்ணவும் உதவுகிறது.
  3. உடல் பருமனை குறைக்கவும் உதவி புரிகிறது. ஒரு வெற்றிலை உடன் சில மிளகு துண்டுகளை சேர்த்து 2 மாதங்கள் உண்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
  4. தாய்ப்பாலை சுரக்கவும் பயன்படுத்தப் படுகிறது. ஒரு இலையை எண்ணெயில் ஊற வைத்து மார்பகங்களின் வெளிப்புறத்தில் வைக்க வேண்டும்.
பாக்கின் மருத்துவ குணங்கள்
  1. மலச்சிக்கலை போக்கும். மலத்துவாரத்தில் உள்ள புண்களை குணப்படுத்தும்.
  2. பற்களில் கசியும் இரத்தத்தை போக்கும்.
சுண்ணாம்பின் மருத்துவ குணங்கள் 
  1. எண்ணெய் பதார்த்தங்களின் செரிமானத்திற்கு உதவுகிறது.
  2. பாக்கில் உள்ள மருத்துவ குண பொருட்களை வெளிக்கொணர உதவுகிறது.
  3. ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுகிறது.
  4. பற்களை உறுதியுடன் வைத்துக் கொள்கிறது.
தாம்பூலம் பயன்படுத்தும் முறை

ஒரு பெரிய வெற்றிலையின் பின்புறத்தில் சிறிதளவு சுண்ணாம்பை தடவிக்கொள்ள வேண்டும். அதனுடன் மிகச்சிறிய அளவு பாக்கை சேர்த்து, மடித்து வாயில் வைத்து நன்றாக மென்று உமிழ்நீரை விழுங்க வேண்டும். தாம்பூலத்தில் உள்ள இந்த மூன்று பொருட்கள் நம் உடலில் உள்ள முக்குணமான வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றையும் சரியான விகிதத்தில் சமன் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. 

Sunday, May 22, 2016

ஆயுர்வேதம்


தமிழ்நாட்டில் தற்பொழுது ஆறு வகையான மருத்துவ முறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன அவை 
  1. தமிழர் மருத்துவ முறை (சித்த மருத்துவம்)
  2. ஆங்கிலேயர் மருத்துவ முறை (அலோபதி மருத்துவம்)
  3. ஆரியர் மருத்துவ முறை (ஆயுர்வேத மருத்துவம்)
  4. முகமதியர் மருத்துவ முறை (யுனானி மருத்துவம்)
  5. இயற்கை மருத்துவ முறை (இயற்கை மருத்துவம்)
  6. ஜெர்மானிய மருத்துவ முறை (ஹோமியோபதி மருத்துவம்)
ஆயுர்வேதத்திற்கு முதலாசிரியர்கள் தேவதாசர் (தன்வந்திரி), சிசிருதர் என்பவர்களே. இவர்கள் இருவரும் ஒரு காலத்தவர்கள். கி.மு 6000 ஆண்டுகளில் வாழ்ந்தவர்கள். சிசிருதர் தேவதாசரின் சிஷ்யர் ஆவார். 

ஆயுர்வேதமானது 100  அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொறு அத்தியாயமும் 100 சுலோகங்களால் அமைக்கப் பட்டிருக்கிறது. 

ஆயுர்வேதம் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை பின்வருமாறு 
  1. சல்லியம் (இரண வைத்தியம்)
  2. சாலக்கியம் (கழுத்துக்கு மேற்பட்ட வியாதிகள்)
  3. காயம் (மற்ற உடலின் வியாதிகள்)
  4. பூதம் (பிசாசு குணங்கள்)
  5. கௌமாரம் (குழந்தை வைத்தியம்)
  6. ஆகதம் (விஷங்களைப் பற்றியது)
  7. இரசாயனம் (இளமையாக்கல்)
  8. வசீகரணம் (வீரிய விருத்தி)
சிசிருதர், விசுவாசமித்திரரின் மூத்த பிள்ளையுக்கு அடுத்த பிள்ளையாவார். இவர்கள் 7 பேர் அண்ணன் தம்பிகள் ஆவர். மூத்த பிள்ளையை தவிர ஏனையோர் தேவதாசரிடம் ஆயுர்வேதம் கற்றுக் கொண்டார்கள்.

சிசிருதர், சிசிருத சம்ஹிதை என்ற நூலை எழுதினார். இவர் இரண வைத்தியத்தில் (சர்ஜரி) நிபுணர். சம்ஹிதை என்றால் மஞ்சரி என்ற பொருள். அதாவது அவருக்கு முன்னிருந்த வைத்தியர்களுடைய அபிப்பிராயங்களை எல்லாம் எடுத்து அக்காலத்துக்கு தகுந்தபடி ஒழுங்குபடுத்தி நூல் செய்வதாகும்.