Wednesday, August 31, 2016

இந்தியா


இந்த கார்ட்டூன் திரு சிராஜ் காசிம் என்பவரால் வரையப்பட்டது. இது ஒடிசா மாநிலத்தில் நடந்த சம்பவம், திரு தானா மாஜி என்பவருடைய மனைவி இறந்த பிறகு உடலை 10 கிலோமீட்டர் தூக்கிக் கொண்டு நடந்தே வந்திருக்கிறார். ஏனெனில் அவருக்கு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டுள்ளது, மேலும் அவர் ஏழை மலைவாழ் குடிமகன். இந்த செய்தியை படித்த வலியின் காரணமாக வரையப்பட்டது.

நன்றி: சிராஜ் காசிம் 

அய்யோ பதறுதுங்க
அடிவயிறு எரியுதுங்க
பொய்யா நெசமான்னும்
புத்திக்கு வெளங்கலங்க

கட்டுனவ செத்துப்போனா
காரியந்தான் செய்வாங்க
பொட்டலமா தூக்கிக்கிட்டா
பொடிநடையா போவாங்க?

பெத்த மக அழுதுகிட்டே
பேசாம நடக்கயில
கத்தியழ ஒருத்தருமே
கடுகளவும் நெருங்கலயே

பொட்டியில காசிருந்தா
போயிருப்பா கவுரமா
துட்டில்லா புருசனுக்கும்
தோள் வலியக் கொடுக்காம

என்னங்க நாடு இது
எழவெடுத்த ஆட்சி இது
பொட்டுன்னு போனாலும்
பொத குழியும் கிடைக்காம

போறது பொருளா? உசுரா?
புரிஞ்சிக்க முடியலைங்க
பாரத மாதாவான்னு
பிரிச்சிப்பாத்து வெளியிடுங்க!

நன்றி: யுவபாரதி 

Tuesday, July 12, 2016

பஞ்சபூத ஸ்தலங்கள்


நிலம் - காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோவில் 

நீர் - திருவானைக்காவல் - ஜம்புகேசுவரர் கோவில் 

நெருப்பு - திருவண்ணாமலை - அண்ணாமலையார் கோவில் 

காற்று - திருகாளஹஸ்தி - காளத்தீஸ்வரர் கோவில் 

ஆகாயம் - சிதம்பரம் - தில்லை நடராஜர் கோவில்

Saturday, June 4, 2016

முதலுதவி பொருட்கள் விற்கும் சாதனம்

14 வயது சிறுவன் டெய்லோர் ரொசந்தல் (Taylor Rosenthal).... அடுத்த பில்கேட்ஸ் என்றால் நம்ப முடிகிறதா?

அப்படி அச்சிறுவன் சாதித்ததுதான் என்ன ........தெரிந்து கொள்ள ஆர்வமா இருக்கிறதா ... வாருங்கள் பார்ப்போம்


அச்சிறுவனுக்கு பேஸ்பால் விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. அவ்வாறு விளையாடும்பொழுது தனக்கோ அல்லது தன்னுடன் விளையாடுபவர்களுக்கோ காயமோ ..சிராய்ப்போ ஏற்படுவதுண்டு. ஒவ்வொறு முறையும் அருகிலுள்ள கடைக்கோ அல்லது மருந்து கடைக்கோ சென்று முதலுதவி பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது. இதை கவனித்த இச்சிறுவன், முதலுதவிப் பொருட்களை ATM போன்று பணம் செலுத்தி உடனுக்குடன் கிடைப்பது போல் பண்ணினால் அனைவருக்கும் உபயோகமாகுமே என்று எண்ணி இதை வடிவமைத்து அதற்கு காப்புரிமையும் பெற்று விட்டான்.  

தற்பொழுது ரெக்மெட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதை பிரபலப் படுத்தியதன் மூலம் இரண்டு இலட்சம் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை பெற்றிருக்கிறது அந்நிறுவனம். மேலும் நிறைய கேளிக்கை பூங்காக்களில் இச்சாதனத்தை நிறுவ முதலீடு செய்திருக்கிறார்கள். 

இப்ப புரியுதா....இச்சிறுவன் அடுத்த பில்கேட்ஸ் என்று.... நாமும் நம் இளைய தலைமுறையை ஊக்கப்படுத்துவோம்.

Sunday, May 22, 2016

முடக்கத்தான் கீரை


முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய வகை கீரையாகும். மழை காலங்களில் மட்டுமே கிடைக்கும் கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில் எல்லோருடைய வீட்டு கொல்லைப் புறங்களிலும் இது படர்ந்து கிடக்கும்.

கை கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதனால் இக்கீரைக்கு முடக்கு + அற்றான் = முடக்கற்றான் என்ற காரணப் பெயர் வந்தது. இதுவே நாளடைவில் மருவி முடக்கத்தான் என்று அழைக்கப் படுகிறது. இதனுடைய தாவரப் பெயர் கார்டியோஸ்பெர்மம் ஹலிக்காகேபம் (Cardiospermum helicacabum) என்பதாகும். இதை ஆங்கிலத்தில் பலூன் வைன் (Balloon vine) என்றும் அழைப்பார்கள். 

இதனுடைய மருத்துவ குணத்திற்கு காரணம் இதில் பொதிந்துள்ள வேதிப் பொருள்கள் ஆகும். அவையாவன அபிஜெனின் (Apigenin), லூட்டியொலின் (Luteolin), கார்டியோஸ்பெர்மின் (Cardiospermin), ஸ்கொபாலெடின் (Scopoletin), அம்பெல்லிபெரோன் (Umbelliferone) மற்றும் பல.




முடக்கத்தான் கீரையை மாதம் இருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது சிறிது கசப்பு சுவையுடையது, ஆனால் சமைத்து சாப்பிட்டால் இதன் கசப்பு சுவை அவ்வளவாக தெரியாது. இதை உணவில் தோசையாகவோ அல்லது துவையல் செய்தோ சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டால் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

இக்கீரை மூட்டுகளில் தங்கியிருக்கும் யூரிக் ஆசிட் (Uric acid) என்ற காரணியை கரைத்து சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். அவ்வாறு செய்யும் பொழுது உடலுக்கு தேவையான சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற உப்புக்களை தங்க வைத்து விடுகிறது, அதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை.

முடக்கத்தான் கீரையை கொதிக்க வைத்து உண்ண வேண்டாம், ஏனெனில் கொதிக்க வைக்கும் பொழுது அதிலுள்ள மருத்துவகுண வேதிப்பொருள் அழிந்துவிடும்.

ஆயுர்வேதம்


தமிழ்நாட்டில் தற்பொழுது ஆறு வகையான மருத்துவ முறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன அவை 
  1. தமிழர் மருத்துவ முறை (சித்த மருத்துவம்)
  2. ஆங்கிலேயர் மருத்துவ முறை (அலோபதி மருத்துவம்)
  3. ஆரியர் மருத்துவ முறை (ஆயுர்வேத மருத்துவம்)
  4. முகமதியர் மருத்துவ முறை (யுனானி மருத்துவம்)
  5. இயற்கை மருத்துவ முறை (இயற்கை மருத்துவம்)
  6. ஜெர்மானிய மருத்துவ முறை (ஹோமியோபதி மருத்துவம்)
ஆயுர்வேதத்திற்கு முதலாசிரியர்கள் தேவதாசர் (தன்வந்திரி), சிசிருதர் என்பவர்களே. இவர்கள் இருவரும் ஒரு காலத்தவர்கள். கி.மு 6000 ஆண்டுகளில் வாழ்ந்தவர்கள். சிசிருதர் தேவதாசரின் சிஷ்யர் ஆவார். 

ஆயுர்வேதமானது 100  அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொறு அத்தியாயமும் 100 சுலோகங்களால் அமைக்கப் பட்டிருக்கிறது. 

ஆயுர்வேதம் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை பின்வருமாறு 
  1. சல்லியம் (இரண வைத்தியம்)
  2. சாலக்கியம் (கழுத்துக்கு மேற்பட்ட வியாதிகள்)
  3. காயம் (மற்ற உடலின் வியாதிகள்)
  4. பூதம் (பிசாசு குணங்கள்)
  5. கௌமாரம் (குழந்தை வைத்தியம்)
  6. ஆகதம் (விஷங்களைப் பற்றியது)
  7. இரசாயனம் (இளமையாக்கல்)
  8. வசீகரணம் (வீரிய விருத்தி)
சிசிருதர், விசுவாசமித்திரரின் மூத்த பிள்ளையுக்கு அடுத்த பிள்ளையாவார். இவர்கள் 7 பேர் அண்ணன் தம்பிகள் ஆவர். மூத்த பிள்ளையை தவிர ஏனையோர் தேவதாசரிடம் ஆயுர்வேதம் கற்றுக் கொண்டார்கள்.

சிசிருதர், சிசிருத சம்ஹிதை என்ற நூலை எழுதினார். இவர் இரண வைத்தியத்தில் (சர்ஜரி) நிபுணர். சம்ஹிதை என்றால் மஞ்சரி என்ற பொருள். அதாவது அவருக்கு முன்னிருந்த வைத்தியர்களுடைய அபிப்பிராயங்களை எல்லாம் எடுத்து அக்காலத்துக்கு தகுந்தபடி ஒழுங்குபடுத்தி நூல் செய்வதாகும்.