Friday, January 29, 2016

இப்படியும் திருவிழா கொண்டாடுவார்களா?

திருவிழாவின் பெயர் கானமார மாட்சூரி (Kanamara Matsuri) என்பதாகும். ஜப்பானில் இவ்விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு தமிழிலில் "ஆண்குறி விழா" என்று அழைக்கப்படுகிறது (Festival of Steel Phallus or Penis festival). இவ்விழாவின் முக்கிய நோக்கம் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பணம் சேகரிப்பதாகும். இவ்விழா ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் முதல் ஞாயிறு கிழமையில் கொண்டாடப்படும். இவ்விழாவை ஆண் பெண் இரு பாலாரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.



இதன் வரலாறு மிக சுவையானது. ஜப்பானில் ஒரு அழகிய பெண் இருந்தாள். அவள் மீது கூரிய பற்களை உடைய அரக்கன் ஆசைப்பட்டு அவளுடைய பெண் உறுப்பில் ஒளிந்து கொள்கிறான். அவளுக்கு திருமணம் நடக்கிறது. அந்நாள் இரவில் அவளுடைய கணவனின் ஆண் உறுப்பை அரக்கன் கடித்து குதறி விடுகிறான். இவ்வாறு இருமுறை நடைபெறுகிறது, அதனால் கோபமுற்ற அப்பெண் கொல்லரிடம் இரும்பினாலான ஆண் உறுப்பை செய்து கொடுக்கும்படி கேட்கிறாள். அதன்படி கொல்லரும் செய்து கொடுக்கிறார். அதை அவள் உபயோகிக்கும் பொழுது அரக்கனின் பல் உடைந்து விடுகிறது. அதன்பின் அப்பெண் வேறு திருமணம் செய்து சந்தோஷமாக இருப்பதாக கதை முடிகிறது.



இத்திருவிழாவில் ஆண் உறுப்பை போன்ற மிட்டாய்களை விரும்பி சுவைக்கிறார்கள்.

இத்திருவிழாவினால் ஜப்பானுக்கு ஒவ்வொரு வருடமும் சுற்றுலா வருவாய் அதிகரித்து கொண்டேயிருக்கிறது.

ப்ளூம் பாக்ஸ் (Bloom Box)

ப்ளூம் பாக்ஸ் (Bloom Box) என்றால் என்ன?

நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்ளும் தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தது யார்? நாமெல்லாம் பெருமையாக சொல்லக்கூடிய தமிழர் திரு கே ஆர் ஸ்ரீதர் அவர்கள் தான்.


அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் (Illinois University) பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்று அங்குள்ள நாசா (NASA) வில் வேளையில் அமர்ந்தார். அங்கு அவர்க்கு கொடுக்கப்பட்ட வேலையானது, செவ்வாய் கிரகத்தில் வாழ முடியுமா? என கண்டறிவதுதான். மேலும் வாழ்வதற்கு தேவையான பிராண வாயுவை (Oxygen) உற்பத்தி பண்ணும் தொழில்நுட்பத்தை கண்டு பிடிப்பதாகும். அந்த முயற்சியில் வெற்றியும் கண்டார். இருந்தும் அமெரிக்கா அரசாங்கம் அந்த ஆராய்ச்சியை மேலும் தொடர விரும்பவில்லை. 

ஆனால் ஸ்ரீதர் அவர்கள் தான் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை கைவிடாமல் வேறு ஆக்கப்பூர்வமான முறையில் உபயோகிக்க விரும்பினார். அதற்காக அல்லும் பகலும் உழைத்து கண்டுப்பிடித்தது தான் நமக்கான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்ளும் தொழில்நுட்பமாகும்.

இம்முறையில் மின்சாரம் எப்படி தயாரிப்பது?

ஆக்சிஜனையும் எரிசக்தியையும் நேர்மின்வாய் (Anode) மற்றும் எதிர்மின்வாய் (Cathode) வழியாக செலுத்தி குறிப்பிட்ட வெப்பத்திற்கு உட்படுத்தினால் மின்சாரம் தயாராகும். 


இந்த மின்சாரத்தை தயாரிக்க மிக பெரிய அளவில் இயந்திர தொழில்நுட்பம் தேவைபடுவதால், அதன் உற்பத்தி செலவும் அதிகரிக்கிறது. ஆனால் கம்ப்யூட்டரைப் போல இதன் விலை மிகவும் குறைய அதிக வாய்ப்பியிருக்கிறது.


இந்த முறையில் தயாரிக்கும் மின்சாரத்தால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஒரு பாக்ஸ் கிட்டத்தட்ட 10 - 12 அடி உயரமிருக்கும். இந்த ஒரு பாக்ஸின் மூலம் இந்தியாவில் 8 வீடுகளுக்கு மின்சாரம் கொடுக்க முடியும்.

இந்த தமிழருக்கு நம் அனைவரின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


Sunday, January 24, 2016

அறுசுவைகள்

பொதுவாக நாம் அறிந்த சுவைகள் ஆறு, அவை 
  1. இனிப்பு 
  2. கசப்பு 
  3. புளிப்பு 
  4. உவர்ப்பு 
  5. உறைப்பு  
  6. துவர்ப்பு 

ஒவ்வொரு சுவையும் தோன்றியது பஞ்சபூதங்களின் கலப்பாகும். அவை பின்வருமாறு 
  1. மண் + நீர் = இனிப்பு 
  2. காற்று + ஆகாயம் = கசப்பு 
  3. மண் + தீ = புளிப்பு 
  4. நீர் + தீ = உவர்ப்பு 
  5. காற்று + தீ = உறைப்பு 
  6. மண் + காற்று = துவர்ப்பு 


ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உள்ளன. 

இனிப்பு 

உடலை ஊட்டப்படுத்தி வளர்த்து பருக்க வைக்கும். இச்சுவை அளவிற்கு அதிகமானால் கபத்தை அதிகரிக்கும்; செரிமனத்தைக் குறைத்து விடும். பெரியோருக்கு மதுமேக நோயை உண்டுபண்ணும். 

கசப்பு 

கசப்பு சுவை பெரும்பாலான நோய்களுக்கு நல்லது. தாவரத்தில் இச்சுவை அதிகமிருந்தால் அதில் ஏராளமான மருத்துவ குண  வேதிப்பொருட்கள் இருக்கின்றது என்று பொருள். பித்த நோய்கள் மற்றும் கப நோய்கள் குணமாகும். மேலும் உடலில் உள்ள விஷத்தன்மையை போக்கும் குணமுடையது. கசப்பை அதிக அளவு சாப்பிட்டால் வாயுவை உண்டாக்கும்.

புளிப்பு 

புளிப்பு சுவை பித்தத்தை தூண்டி ஜீரணத்தை நெறிப்படுத்தும். காய்கறிகளை புளிச்சாற்றில் ஊற வைத்து சமைத்தால் அதிலுள்ள உயிர் சத்தும் புரதச்சத்தும் கெடாமல் இருக்கும். இச்சுவை அளவுக்கு அதிகமானால் நரம்பு தசைகள் தளரும் மற்றும் இரத்த சோகை எற்படும்.  

உவர்ப்பு 

உவர்ப்பு சுவையை குறைந்த அளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். "சிறுக அளவோடு சேர்த்துண்ண தேகத்து உறுப்பின் சுருக்கம் குறையும்" என்பது பழமொழி. அதிக அளவு சேர்த்துக்  கொண்டால் இரத்தக்கொதிப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகள் எற்படும்.

உறைப்பு 

உறைப்பு சுவை செரிமனத்தை தூண்டும்; கபத்தை போக்கும் மற்றும் உணர்ச்சியை தூண்டும். அதிக அளவு எடுத்து கொண்டால் நரம்பு தளர்ச்சியை உண்டாக்கும்.

துவர்ப்பு 

துவர்ப்பு சுவையை மருத்துவ சுவை என்று கூறுவார்கள். ஏனெனில் இது இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மையுடையது. இச்சுவை நெல்லிகனியிலும் மற்றும் வாழைப்பூவிலும் அதிகம் நிறைந்து இருக்கும்.


நம் உணவில் இந்த அறுசுவையையும் அளவோடு சமமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

NHANES - Taste and Smell Examination Component Manual
Nutrition & Food Sciences

Saturday, January 23, 2016

சீரகம்

சீரகம் (சீர் + அகம்)


அகத்தை சீர் செய்யக்கூடிய பொருள் தான் சீரகம் ஆகும். இதனுடைய பூர்வீகம் எகிப்து நாடாகும். இதன் தாவரப் பெயர் Cuminum cyminum (Umbelliferae). சீரகத்தில் இரும்பு சத்து அதிகளவில் உள்ளது. இது நம் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் என்ற பொருளிலுள்ள ஹீமுடன் (Heme) இணைந்து பிராண வாயுவை உடல் முழுவதும் எடுத்து செல்கிறது. 


இதில் டேர்பீன்ஸ் (Terpenes) என்று சொல்லக்கூடிய எஷன்ஷியல் ஆயில் (Essential oils) அதிக அளவு உள்ளது. பொதுவாக குமினால்டிஹைடு (Cuminaldehyde) மற்றும் தைமோல் (Thymol) என்ற மருத்துவ குணம் கொண்ட வேதிப்பொருள் அதிக அளவு உள்ளது. இது நம் வாயிலுள்ள உமிழ்நீர் சுரப்பி (Salivary glands) மற்றும் ஜீரண மண்டலத்தில் அமிலம் (Acids), காரம் (Bile), ஜீரண நொதிபொருளை (Digestive enzymes) சுரக்க தூண்டுகிறது.


ஒரு தேக்கரண்டி சீரகத்தை 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து (பாத்திரத்தை மூடி) பின்பு குளிர வைத்து நாள் முழுவதும் குடித்து வந்தால் ஜீரண மண்டலத்தில் எந்த பிரச்சனையும் வராது. மேலும் நம் உடல் குளிர்ச்சி அடையும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் ஆகியவை நீங்கி விடும்.

சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து, கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு விரைவில் நிற்கும்மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

சீரகத்தை வறுத்து மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி சாப்பிட்டால் மந்தம் நீங்கும்முருங்கைக் கீரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலையும் மாலையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.

சீரகத்தில் பல வகைகள் உள்ளன, அவை பெருஞ்சீரகம் (Fennel), சிறுஞ்சீரகம் (Caraway) மற்றும் கருஞ்சீரகம்.



பெருஞ்சீரகத்தின் தாவரப் பெயர் Foeniculum vulgare என்றும், சிறுஞ்சீரகத்தின் தாவரப் பெயர் Carum carvi என்றும் அழைக்கப்படுகிறது. இவை இரண்டும் Umbelliferae என்ற குடும்பத்தை சேர்ந்தது. பெருஞ்சீரகத்தில் Anethole என்ற வேதிப்பொருளும், சிறுஞ்சீரகத்தில் Carvone என்ற வேதிப்பொருளும் அதிக அளவு உள்ளன.


இப்பொருள்கள் அனைத்தும் நம் வீட்டு சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் மிக முக்கிய இடம் பிடித்திருக்கும்.

Saturday, January 16, 2016

டெங்கு (டெங்கி) காய்ச்சல்

டெங்கு (டெங்கி) காய்ச்சல் (Dengue Fever), DENV என்று அழைக்கக்கூடிய வைரஸினால் ஏற்படக்கூடியது. இது நான்கு உள்வகை (Subtypes: DENV-1, DENV-2, DENV-3 & DENV-4) பிரிவுகளை உடையது. பொதுவாக இது ப்ளேவிவைரஸ் (Flavivirus) என்று அழைக்கக்கூடிய ப்ளேவிவிரிடே (Flaviviridae) குடும்பத்தை சேர்ந்தது. இக்காய்ச்சல் மலேரியாவைப்போல கொசுக்களினால் பரவக்கூடியது. இக்கொசு ஏடெஸ் இஜிப்டி (Aedes aegypti) என்று அழைக்கப்படுகிறது. இது  சுத்தமான தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.

டெங்கு (டெங்கி) காய்ச்சலுக்கு இதுவரை  ஆங்கில மருத்துவத்தில் மருந்து எதுவுமில்லை. பொதுவாக  எந்த வைரஸ் நோய்க்கும் மருந்து கிடையாது. ஆகவேதான் தடுப்பு மருந்து பிறந்தது முதல் கொடுக்கப்படுகிறது. பிறகு எப்படி சித்த மருத்துவத்தில் குணப்படுத்தப்படுகிறது?


டெங்கு (டெங்கி) காய்ச்சல் ஆசியா மற்றும் ஆப்ரிக்கா கண்டங்களில் அதிக அளவு காணப்படுகிறது.


இக்கொசு, டெங்கு (டெங்கி) காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து இரத்தத்தை உறிஞ்சி உட்கொண்டு பின்பு சாதாரண நபர்களை கடிக்கும் பொழுது, கொசு இரத்தத்திலுள்ள வைரஸ், கடி படுபவரின் இரத்தத்தில் கலந்து விடுகிறது..


சித்த மருத்துவத்தில் டெங்கு (டெங்கி) காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் மிக அருமருந்தாகும். இது ஒன்பது மூலிகைகளை உள்ளடக்கியது.

நிலவேம்பு (Andrographis paniculata)
வெட்டிவேர் (Vetiveria zizanioides)
விலாமிச்சை வேர் (Plectranthus vettiveroides)
சுக்கு (Zingiber officinale)
மிளகு (Piper nigrum)
கோரைக்கிழங்கு (Cyperus rotundus)
சந்தனம் (Santalum album)
பற்படாகம் (Mollugo cerviana)
பேய்புடல் (Trichosanthes cucumerina)

சித்த மருந்து கடையில் நிலவேம்பு குடிநீர் பொடி கிடைக்கிறது. ஒரு தேக்கரண்டி அளவு பொடியை 200 மிலி அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் அளவு 50 மிலி வந்தவுடன் இதை வடிகட்டி 10 - 50 மிலி அளவு குடிநீரை பெரியவர்கள் குடிக்க வேண்டும். 5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் 15 மிலி அளவு குடிக்க வேண்டும். 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் 5 - 10 மிலி அளவு குடிக்க வேண்டும். குடிநீர் தயாரித்த 3 மணி நேரத்தில் உபயோகித்து கொள்ள வேண்டும். நிலவேம்பு குடிநீரை சாப்பாட்டுக்கு முன் குடிப்பது மிகவும் சிறந்தது.

மூலப்பொருட்களின் நன்மைகள்:

நிலவேம்பு - முக்கிய மூலப்பொருள், காய்ச்சலை குணமாக்கும் வேதிப்பொருள் மிகுந்து இருக்கிறது, வைரஸ் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.

கோரைக்கிழங்கு, பற்பாடகம் - காய்ச்சலை குணப்படுத்தும்.

பேய்ப்புடல் - குடலில் தங்கியுள்ள மாசுக்களை வெளியேற்றும்.

சுக்கு, மிளகு - உடலில் சுரக்கும் நொதிகளை சீராக்கும்.

வெட்டி வேர், விலாமிச்சை வேர், சந்தனம் - ஜுரத்தால் ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும்.

Dengue Fever - Pitha Suram
NIS - Dengue & Chikun Gunya
WHO - Dengue Fever