Saturday, May 7, 2016

தமிழ்நாடு சட்டசபை தேர்தல்

தமிழ்நாடு 15 ஆவது சட்டசபை தேர்தல் வரும் மே திங்கள் 16 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதன் முடிவுகள் மே திங்கள் 19 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அப்பொழுது தமிழ்நாட்டின் தலைவிதி அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆளப்போவது என்பது நிர்ணயிக்கப்படும்.


தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன, 2016 சட்டசபை தேர்தலை பற்றி பார்ப்பதற்கு முன்பு சுதந்திரம் (குடியரசு) அடைந்த தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களைப் பற்றி பார்ப்போம்.

குடியரசு இந்தியாவில் 1950 ஆம் ஆண்டு மதராஸ் மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற தேர்தல்களும், வெற்றி பெற்று ஆட்சி  அமைத்தவர்களும் பின்வருமாறு


1968 ஆம் ஆண்டு மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப் பட்டது. அதன் பிறகு நடந்த தேர்தல்களும், ஆட்சி அமைத்தவர்களும் பின் வருமாறு 


கும்முடிபூண்டி (தொகுதி-1) யிலிருந்து கிள்ளியூர் (தொகுதி-234) வரை, தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் இருக்கிறது.  





2016 ஆம் ஆண்டு தேர்தல் பலமுனை போட்டியாக உள்ளது. இந்த தேர்தலில் பின்வரும் பெரிய கட்சிகளும் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டி போடுகின்றன 







2016 தேர்தலின் முடிவு



Friday, May 6, 2016

கோபுரக்கலசம்

"கோயில் இல்லாத ஊரில் யாரும் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழியை நம் முன்னோர்கள் சொன்னதை கேள்விப் பட்டதுண்டா.....அது ஏன் என்று யோசித்ததுண்டா .....? 


கோயில்களையும், கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அது பற்றிய அறிவியல் உங்களுக்கு தெரியுமா..?

கோபுரக்கலசங்கள் பொதுவாக ஐம்பொன்களால் செய்யப் பட்டதாகும். இந்த கலசத்தில் கொட்டப்படும் தானியங்களும் மற்றும் உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்கு கொடுக்கிறது. தானியங்கள் என்று சொல்லும்போது அது நவதானியங்களைக் குறிக்கும், அவையாவன நெல், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, வரகு, சோளம், மக்காச்சோளம், எள் போன்றவற்றை குறிக்கும்.

இதில் வரகு தானியத்தை அதிகம் கொட்டினார்கள், ஏன் என்று தேடினால் விடை மிக ஆச்சரியம் தருவதாக இருக்கிறது. "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது.


இது மட்டும் தானா......இல்லை .......இன்னும் இருக்கிறது, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியங்களை நீக்கிவிட்டு புதிய தானியங்களை நிரப்புவார்கள்", அது ஏன் என்ற காரணத்தை தேடினால் அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு தானியங்கள் செயல் இழந்து விடுகிறது. 

கலசங்களில் தானியங்களை வைப்பதினால் மற்றொறு பயனும் இருந்தது, அந்த காலத்தில் மழை பெய்தால் குறைந்தது மூன்று மாதத்திற்கு விடாமல் பெய்யும். ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை. அதனால் கலசத்தில் இருக்கும் தானியத்தை எடுத்து மீண்டும் விதைக்கலாமே .....!

ஒரு இடத்தில் இடியோ அல்லது மின்னலோ தாக்கினால் அங்குள்ள மிக உயரமான இடத்தில் அமைந்த இடிதாங்கியே முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரை காப்பாற்றும் என்பது அதன் உயரத்தை பொறுத்தது. கோபுரக் கலசங்களே இடிதாங்கிகள் ஆகும். உதாரணமாக கோபுரத்தின் உயரம் 100 மீட்டர் என்றால் 200 மீட்டர் விட்டம் வரைக்குமான பரப்பளவில் எத்தனை பேர் இருந்தாலும் இடி தாக்காமல் காப்பாற்றப்படுவார்கள். அதாவது சுமார் 31400 சதுர மீட்டர் பரப்பளவில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப் படுவார்கள். 

சில கோயில்களில் நான்கு வாயில்கள் இருக்கின்றன, அது நாலாபுறமும் 31400 சதுர மீட்டர் பரப்பளவை காத்து நிற்கிறது. இது ஒரு தோராய கணக்கு தான் .....எத்தனை பிரமிப்பு ....!!!

சும்மாவா சொன்னாங்க நம்ம பெரியவங்க....!!!

குளியல்



உண்மையில் நம்மில் பலருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை...நம்ப முடியுதா?...இல்லைதானே .....

அதைப்பற்றி இப்பொழுது பார்ப்போம் ....

குளிப்பது ......அழுக்கு போகவா.........! நிச்சயம் கிடையாது.............!

மாத மளிகை பட்டியலில் சோப்புக்கு என்று ஒரு தொகை ஒதுக்குவோம், இல்லையா.......! சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?  கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடல் முழுவதும் ஆயில் படிந்து விடும். இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பை பயன்படுத்தினார்கள். 

சோப்பு போட்டு குளிப்பதற்கு நாம் எந்த கப்பலில் வேலை பார்த்தோம்? ஆனால் வணிக பெருமுதலைகள் சும்மா இருப்பார்களா? ஆயிலில் வேலை செய்வோர் மட்டுமே பயன்படுத்தி வந்த சோப்பை எல்லோரும் பயன்படுத்தும்படி பல திட்டம் தீட்டி, கிருமிகள் என்ற பயத்தை உருவாக்கி, நடிகர்களை நடிக்க வைத்து நம் தலையில் கட்டிவிட்டார்கள்.

இதனால் என்ன ஆனது?

சோப்பு போட்டு குளிப்பதனால் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படலம் அழிக்கப்படுகிறது. இதை சீர் செய்யவே உடம்பு பெரும் பாடுபடுகிறது. நமக்கு வாய் முகத்தில் மட்டும் அல்ல தோலில் மேல் இருக்கும் ஒவ்வொறு வியர்வை துவாரங்களும் வாயே. சோப்பு போடுவதனால் தோல் மூலமாக நம் உடலில் கிரகிக்கும் பிரபஞ்ச சக்தியை தடுத்து விடுகிறோம்.

சரி....பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா......?

குளியல் = குளிர்வித்தல் 

குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது. மனிதர்களுக்கு வரும் 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பமேயாகும். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்ப கழிவுகள் தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிர்ந்த நீரில் குளிக்கிறோம்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலையில் ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு. நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும். பின் முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி கடைசியாக தலைப்பகுதி.

எதற்கு இப்படி .........? காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும். நேரடியாக தலையில் ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டியிருக்கும். 

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண் முன்னே கொண்டு வாருங்கள். 


குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நனையும். அப்பொழுது வெப்பக்கழிவு கீழ் இருந்து மேல் எழும்பி கடைசியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெளியேறிவிடும். இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா .....! உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

ஏன் ..................?

உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது, சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். எனவே உச்சியில் சிறிது நனைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மேலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.

குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத்துணியோடு இருப்பது மிகவும் நல்லது. அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% பிராண வாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்திக் கொள்ளும். பிராண வாயு அதிகரித்தால் பித்தம் நீங்கி அனைத்து நோய்களும் ஓடிவிடும்.

சித்தர்கள் அருளியுள்ள மூச்சு கணக்கு


தமிழ் மொழியால் நம்முடைய ஆயுள் நீளும் என்பது உங்களுக்கு தெரியுமா? தமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம் என்று சித்தர்கள்  கூறுகிறார்கள், எப்படி?

உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில், ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு x ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள், நாழிகை ஒன்றுக்கு 360 மூச்சு (15 x 24) எனச் சித்தர்களால் வகுப்பப்பட்டுள்ளது. இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது. 

ஒரு மணி நேரத்திற்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21600 மூச்சு வீதம் ஓடுகிறது. 

இதற்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்? இந்த கேள்வி உங்கள் மனதில் எழலாம், அதற்கான பதில்....

இந்த 21600 மூச்சுக்களை குறிக்கவே தமிழில் 216 (உயிர்மெய்) சார்பெழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21600 வீதம் நாள் ஒன்றுக்கு செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூட்டினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!

உட்கார்ந்திருக்கும் போது 12 மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஓடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும், உடலுறவு மற்றும் கோபம் போன்ற உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் ஒரு நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறையும்.

தமிழ் வயிற்று மொழி அல்ல; நீடித்த ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாழ்க்கை நெறிமொழி!

Thursday, May 5, 2016

சிதம்பர ரகசியம்


பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன (Centre Point of World's Magnetic Equator).


இதற்காக ஜெனிவாவில் உள்ள ஐரோப்பிய யூனியன் நியூக்லியர் ஆராய்ச்சி மையத்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்காக இதுவரை செலவு செய்த தொகை தோராயமாக 10 பில்லியன் ஸ்டெர்லிங் (£10bn) ஆகும். இந்த ஆராய்ச்சி மையத்தின் பெயர் CERN (Conseil Européen pour la Recherche Nucléaire). 


இயற்கை விதிகளை கண்டுப்பிடிப்பதற்காக நிறுவப்பட்ட அமைப்பாகும். அதற்கு ஆதாரமாக நம் நடராஜர் சிலையை அங்கு அமைத்துள்ளார்கள்.


இதைத்தான் எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப் வசதியும் இல்லாமல் நம் முன்னோர்கள் கண்டறிந்து, உணர்ந்து, அணுத்துகள் அசைந்துகொண்டேயிருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்தி அனைவரையும் வழிபட செய்தார்கள். இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்பேற்பட்டது? 

திருமூலரின் திருமந்திரம் உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும். இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்.

சிதம்பர ரகசியங்கள் 

1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப்பகுதி என்று கூறப்படுகிறது.

2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் மூன்றும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது 79 டிகிரி, 41 நிமிட கிழக்கு தீர்க்க ரேகையில் (Longitude) அமைந்துள்ளது. இதை கூகுள் மேப்பில் பார்த்தால் அதன் துல்லியம் நமக்கு புரியும்.  நமது முன்னோர்கள் பொறியியல், புவியியல் மற்றும் வானவியலில் எவ்வளவு தலைசிறந்து விளங்கியுள்ளார்கள், ஆச்சரியம்......!  


3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிக்கின்றது (கண், காது, மூக்கு, வாய், சிறுநீர் துவாரம் மற்றும் மலத்துவாரம்).

4) விமானத்தின் மேல் இருக்கும் பொற்கூரை 21600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவை சுவாசிக்கின்றான் என்பதைக் குறிக்கின்றது (15x60x24).

5) இந்த 21600 தகடுகளை வேய 72000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.

6) திருமந்திரத்தில் திருமூலர் 
          மானுடராக்கை வடிவு சிவலிங்கம் 
               மானுடராக்கை வடிவு சிதம்பரம் 
                    மானுடராக்கை வடிவு சதாசிவம் 
                         மானுடராக்கை வடிவு திருக்கூத்தே 
என்று கூறுகிறார். அதாவது மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம் என்ற பொருளைக் குறிக்கின்றது. 

7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில் உள்ள இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைப்பார்கள். அதாவது "சி, வா, ய, ந, ம" என்ற ஐந்து எழுத்துக்களே ஆகும். "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேர் வழியாக இல்லாமல் பக்கவாட்டில் அமைந்துள்ளது. இதை தாங்க 4 தூண்கள் உள்ளன, இது 4 வேதங்களை குறிக்கிறது. 

8) பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களை குறிக்கிறது. இந்த 28 தூண்களும் 64 மெற்பலகைகளை கொண்டுள்ளது. இது 64 கலைகளை குறிக்கும் மற்றும் இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் மனித உடலில் ஓடும் இரத்த நாளங்களை குறிக்கின்றது.

9) பொற்கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்திற்கு பக்கம் இருக்கும் மண்டபத்தில் 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கிறது. 

10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "Cosmic Dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

கடவுளின் அணுத்துகள் (God's Particle)

நம் இந்தியாவில் இதுபோல் ஒரு ஆராய்ச்சியை தொடங்கப் போகிறார்கள். இந்த ஆராய்ச்சி நமது தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைய இருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்கு பெயர் "நியூட்ரினோ துகள்" [Indian-based Neutrino Observatory (INO)] ஆராய்ச்சி. இதனால் நமது சுற்றுச் சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.


இதைப்பற்றி  பின்னர் பார்ப்போம்.