Friday, May 6, 2016

சித்தர்கள் அருளியுள்ள மூச்சு கணக்கு


தமிழ் மொழியால் நம்முடைய ஆயுள் நீளும் என்பது உங்களுக்கு தெரியுமா? தமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம் என்று சித்தர்கள்  கூறுகிறார்கள், எப்படி?

உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில், ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு x ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள், நாழிகை ஒன்றுக்கு 360 மூச்சு (15 x 24) எனச் சித்தர்களால் வகுப்பப்பட்டுள்ளது. இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது. 

ஒரு மணி நேரத்திற்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21600 மூச்சு வீதம் ஓடுகிறது. 

இதற்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்? இந்த கேள்வி உங்கள் மனதில் எழலாம், அதற்கான பதில்....

இந்த 21600 மூச்சுக்களை குறிக்கவே தமிழில் 216 (உயிர்மெய்) சார்பெழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21600 வீதம் நாள் ஒன்றுக்கு செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூட்டினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!

உட்கார்ந்திருக்கும் போது 12 மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஓடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும், உடலுறவு மற்றும் கோபம் போன்ற உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் ஒரு நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறையும்.

தமிழ் வயிற்று மொழி அல்ல; நீடித்த ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாழ்க்கை நெறிமொழி!

No comments: