Tuesday, September 27, 2016

கற்பூரவள்ளி


கற்பூரவள்ளி சித்த மருத்துவத்தில் "கற்ப மூலிகை" என்று அழைக்கப்படும். இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இந்த மருத்துவ பயன்களுக்கு காரணம் அதில் பொதிந்துள்ள வேதிப்பொருட்களே ஆகும். இவை டெர்பினாய்ட்ஸ் (Terpenoids) என்ற வகையை சேர்ந்ததாகும்.


சித்தர்கள் அகத்தியர் மற்றும் தேரையர் இந்த மூலிகையை பற்றி பாடல்களாக வடித்துள்ளனர். அவை 

காச இருமல் கதித்தம சூரியயையம் 
பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் வீசுசுரங் 
கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்
கற்பூர வள்ளிதனைக் கண்டு 
(அகத்தியர் குணபாடம்)   

கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின
நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே 
(தேரையர் குணபாடம்)  

குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். அப்போது கற்பூரவள்ளி இலையை பிழிந்து சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு (Palm Sugar) கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் குணமாகும்.


இம்மூலிகை காச நோய்க்கு அருமருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறெடுத்து அதனுடன் தேன் (Honey) கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறையும்.

ஆகையால் நம் வீட்டில் கற்பூரவள்ளியை வளர்த்து அதனுடைய மருத்துவ பயனை அடைவோம்.

Sunday, September 25, 2016

பொன் முட்டையிடும் வாத்து

மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதல்வர் திரு ஜெயலலிதா அவர்கள் 22-09-2016 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் இரவு 10.15 க்கு சேர்க்க படுகிறார். 

  
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இரவு 1.00 மணிக்கு முதல்வர் அவர்களின் உடல்நிலை குறித்து செய்தி வெளியிடுகிறது. இதை கேட்டவுடன் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருக்கும் அனைவரும் இரவு 1.05 மணி முதல் மருத்துவமனை முன்பு திரளாக குவிகிறார்கள். அவர்கள் அனைவரும் அன்று இரவு மற்றும் மறுநாள் முழுவதும் மருத்துவமனை கதவின் முன்பு காத்திருக்கிறார்கள். கடவுளின் அருளால் நமது முதல்வர் உடல்நலம் பெற்று ஆரோக்கியமாக இருக்கிறார்.


படம்: நன்றி விகடன்

நமது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பாசத்தை கண்டவுடன் உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சு. இதே பாசத்தை நமது விவசாயிகளிடமும், மக்களிடமும் காண்பித்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அவர்களுக்கு தெரியாத என்ன? நமது முதல்வர் அவர்கள் அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் "பொன் முட்டையிடும் வாத்து" என்று! முதல்வர் மட்டும் இல்லையென்றால் அமைச்சர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் "செல்லா காசு"!

வாழ்க நமது அமைச்சர்களின் அளப்பரிய சேவை!

மக்கள் மத்தியில் இன்னொறு விதமான எண்ண ஓட்டமும் உள்ளது. இந்த காய்ச்சல் உண்மையான காய்ச்சலா? இல்லை சொத்து குவிப்பு வழக்கில் வரும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முன்னாடியே ஏற்படுத்திக் கொண்ட நாடகக் காய்ச்சலா? அல்லது உண்மையிலேயே முதல்வர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறாரா?

ஆண்டவனுக்கே வெளிச்சம்!!

நம் மதிப்பிற்குரிய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் டிசம்பர் 5 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

Friday, September 23, 2016

இந்திய தொழிற்நுட்பக் கல்லூரிகள் (IITs)


இந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்கள் உள்ளன. அவற்றில் 8 மாநிலங்களை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் இந்திய தொழிற்நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. தொழிற்நுட்பக் கல்லூரிகள் இல்லாத மாநிலங்கள் பின்வருமாறு 

1) அருணாசலப் பிரதேசம்
2) ஹரியானா  
3) மணிப்பூர் 
4) மேகாலயா 
5) மிசோரம் 
6) நாகலாந்து 
7) சிக்கிம் 
8) திரிபுரா 

Sunday, September 18, 2016

இந்திய மொழிகள்

இந்தியா பல மொழி வழி மாநிலங்கள் சேர்ந்த தேசமாகும். அதனால் இந்திய தேசத்திற்கு என்று ஒரு தேசிய மொழி கிடையாது. ஆகையால் "ஹிந்தி" மொழியை தேசிய மொழி (National Language) என்று யாரும் கூற வேண்டாம். அது ஒரு அதிகார அலுவல் (Official) மொழியாகும். 


இந்தியாவில் 8 வது அரசியலமைப்பு அட்டவணையின் படி 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டவையாகும், அவை 


இது தவிர இந்திய மாநிலங்களின் அதிகாரபூர்வ மொழிகளை பற்றி பார்ப்போம்.


ஆகையால் ஹிந்தி மொழியை தேசிய மொழி என்று பரப்புரை செய்ய வேண்டாம். 

Saturday, September 17, 2016

கடிகாரமும் உடல் உறுப்பு பணிகளும்



கடவுள் ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் இரண்டு மணி நேரம் ஒதுக்கி உள்ளார். அந்தந்த நேரத்தில் அந்த உடல் உறுப்பு அதனதன் வேலையை செய்ய நாம் அனுமதிக்க வேண்டும், இல்லையேல் நமது ஆரோக்கியம் பாழாகும்.

காலை 3.00 மணியிலிருந்து 5.00 மணி வரை 


இது நுரையீரலுக்கான நேரம், இந்நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாக சேகரித்தால் ஆயுள் நீடிக்கும். தியானம் செய்ய உகந்த நேரமாகும்.

காலை 5.00 மணியிலிருந்து 7.00 மணி வரை 


இது பெருங்குடலுக்கான நேரம், இந்த நேரத்தில் காலை கடன்களை கண்டிப்பாக முடித்து விட வேண்டும். மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்கு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும். இந்த நேரம் உடலுறவுக்கும் உகந்த நேரமாகும், ஏனென்றால் இந்நேரத்தில் உயிர் அணுக்களின் எண்ணிக்கை அதிக அளவு இருக்கும்.

காலை 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரை 


இது வயிற்றுக்கான நேரம், இந்த நேரத்தில் கல்லை தின்றாலும் வயிறு கரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும். காலை உணவை எப்பொழுதுமே தவிர்க்க கூடாது. காலையில் சாப்பிடுவது தான் உடலில் ஒட்டும்.

காலை 9.00 மணியிலிருந்து 11.00 மணி வரை 


இது மண்ணீரலுக்கான நேரம், காலையில் உண்ட உணவு செரித்து இரத்தமாகவும், ஊட்டச்சத்தாகவும் மாற்றும் நேரமாகும். இச்சமயம் தண்ணீரே குடிக்கக் கூடாது. நீரிழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரமாகும்.

காலை 11.00 மணியிலிருந்து 13.00 மணி வரை 


இது இதயத்திற்கான நேரமாகும், இந்நேரத்தில் அதிகமாக பேசுதல், கோபப்படுதல், படபடத்தல் கூடாது. இதய நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்கும் நேரமாகும்.

மதியம் 13.00 மணியிலிருந்து 15.00 மணி வரை


இது சிறுகுடலுக்கான நேரம், இந்த நேரத்தில் மிதமான உணவை உட்கொண்டு சிறிது நேரம் ஓய்வெடுப்பது நல்லது.

மதியம் 15.00 மணியிலிருந்து 17.00 மணி வரை


இது சிறுநீர்ப்பைக்கான நேரம், நீர் கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரமாகும்.

மாலை 17.00 மணியிலிருந்து 19 மணி வரை 


இது சிறுநீரகங்களின் நேரமாகும், பகல் நேர பரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிகாலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம் செய்ய மற்றும் வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

இரவு 19.00 மணியிலிருந்து 21.00 மணி வரை 


இது பெரிகார்டியத்தின் நேரமாகும், பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஜவ்வு ஆகும். இந்நேரம் இரவு உணவுக்கு உகந்த நேரமாகும்.

இரவு 21.00 மணியிலிருந்து 23.00 மணி வரை


இது டிரிபிள் ஹீட்டருக்கான நேரம். டிரிபிள் ஹீட்டர் என்பது உடல் உறுப்பு அல்ல. இது உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை. இந்நேரம் உறங்கச் செல்ல உகந்த நேரமாகும்.

இரவு 23.00 மணியிலிருந்து 1.00 மணி வரை


இது பித்தப்பைக்கான நேரம், இந்த நேரத்தில் தூங்காமல் விழித்திருந்தால் பித்தப்பை செயல்பாடு பாதிக்கும்.

இரவு 1.00 மணியிலிருந்து 3.00 மணி வரை


இது கல்லீரலுக்கான நேரம், இந்நேரத்தில் உட்கார்ந்து இருக்கவோ விழித்திருக்கவோ கூடாது. கண்டிப்பாக படுத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் உடலில் ஓடும் இரத்தத்தை கல்லீரல் சுத்திகரித்து அனுப்பும் நேரமாகும். இந்நேரம் விழித்திருந்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பு இல்லாமல் பாதிப்பு அடைவீர்கள்.