Friday, June 30, 2017

சாம்பிராணி



தமிழ்நாட்டில் சாம்பிராணியின் உபயோகம் பலவாக உள்ளது. பொதுவாக நம் வீட்டில் பூஜையின் போது சாம்பிராணி புகை போடும் பழக்கம் உள்ளது, அதுபோல் குழந்தைகள் குளித்த பின்பு தாய்மார்கள் சாம்பிராணி புகை போடுவார்கள். 

இவ்வாறு செய்வதினால் என்ன பயன்கள்?
  1. சாம்பிராணி மிகச்சிறந்த வாசனை பொருள்; இதன் புகை நம்முடைய மனத்தை சாந்தப்படுத்துகிறது, அதனால் தெய்வ வழிப்பாட்டில் மிகவும் உபயோகிக்கப்படுகிறது 
  2. குழந்தைகளுக்கு சளி பிடிப்பதை தவிர்க்கிறது, அதனால்தான் குழந்தை குளித்த பின்பு சாம்பிராணி புகை காட்டப்படுகிறது.
  3. சித்த மருத்துவத்தில் வாத நோய்க்கு அருமருந்தாகும். சாம்பிராணியை நல்லெண்ணெயில் நன்றாக காய்ச்சி தேய்த்து வந்தால் வாத நோய் குணமாகும். 
  4. ஆயுர்வேத மருத்துவத்தில் சளியால் ஏற்படும் தலைவலியை குணமாக்க உதவுகிறது. ஏலக்காய், மஞ்சள், சாம்பிராணி, வாய்விளங்கம் மற்றும் நாயுருவி விதை, இந்த ஐந்து பொருட்களையும் நன்கு இடித்து வைத்துக்கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு வெள்ளை துணியில் இட்டு பென்சில் போல் சுருட்டிக்கொள்ள வேண்டும். ஒருமுனையில் 1 அல்லது 2 சொட்டு நல்லெண்ணெய் விட்டு கொளுத்த வேண்டும்; எரியும் பொழுது தீயை அணைத்துவிடவும். அப்பொழுது புகை அதிகம் வரும், அந்த புகையை சுவாசித்தால் சளியுடன் கூடிய மூக்கடைப்பு போய் தலைவலி நிற்கும்.
சாம்பிராணியில் உள்ள மருத்துவகுணப் பொருட்கள்


Saturday, May 6, 2017

நீடித்த ஆயுளுடன் வாழ

நாம் சில பழக்க வழக்கங்களை ஒழுங்காக கடைப்பிடித்தால் நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

அது என்ன?   


               தினம் இருமுறை
                               வாரம் இருமுறை
                                                மாதம் இருமுறை
                                                                 வருடம் இருமுறை

நம் வாழ்வில் சில விடயங்களை மேலே சொன்னபடி இருமுறை மட்டுமே கடைப்பிடித்து வந்தால் நீடித்த ஆயுளுடன் வாழலாம். 

அவை எவை எவை .................

தினம் இருமுறை - நாம் தினமும் இரண்டு வேலை மலம் கழிக்க வேண்டும். மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கலே பல நோய்களுக்கு மூல ஆதாரமாகும்.

வாரம் இருமுறை - நாம் அனைவரும் வாரம் இரண்டு தடவை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். 


ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்ப்பது என்பது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்து பின்பு வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். முக்கியமாக ரொம்ப நேரம் ஊற வைக்கக் கூடாது, அதனால் நமக்கு சளி பிடிக்கும்.

மாதம் இருமுறை - திருமணத்திற்கு பிறகு மாதம் இரண்டு முறை தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ள வேண்டும். இருமுறை என்பது அடுத்தடுத்த இரண்டு நாட்கள் இல்லை. கண்டிப்பாக 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே.

வருடம் இருமுறை - வருடத்திற்கு இரண்டு தடவை வயிறை சுத்தம் செய்ய வேண்டும். 

வயிறை சுத்தம் செய்வது என்றால் எப்படி?

பேதிக்கு மருந்து சாப்பிட வேண்டும். அதிலும் ஒரு முறையிருக்கு, அதன்படி செய்ய வேண்டும். பேதி மருந்து சாப்பிடுவதற்கு 4 நாட்களுக்கு முன்னரே நம்மளை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். 

எப்படி?  

நாம் ஞாயிற்று கிழமை பேதி மருந்து எடுத்துக் கொள்ள போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது நம்முடைய தயாரிப்பு புதன் கிழமையே தொடங்கி விடவேண்டும். புதன் கிழமை எப்பவும் போல உணவு எடுத்துக் கொள்ளலாம். வியாழக்கிழமை வேகவைத்த காய்கறிகளை மட்டுமே உண்ண வேண்டும். வெள்ளிக்கிழமை பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். சனிக்கிழமை பழச்சாறு மட்டுமே குடிக்க வேண்டும். அப்புறம் ஞாயிற்றுக்கிழமை பேதி மருந்து எடுத்துக்கொண்டு ஒன்றும் சாப்பிடக் கூடாது. அவ்வாறு இருக்க முடியாதவர்கள் அன்று இரவு பழச்சாறு எடுத்துக் கொள்ளலாம். இதே முறையைத்தான் மருந்து சாப்பிட்ட பின்பும் கடைபிடிக்க வேண்டும். அதாவது மறுநாள் (திங்கள் கிழமை) பழச்சாறு எடுத்து கொள்ளணும், செவ்வாய் கிழமை பழங்கள் சாப்பிட வேண்டும். புதன் கிழமை வேகவைத்த காய்கறிகள் சாப்பிடணும். வியாழக்கிழமை முதல் எப்பவும் போல் உணவு எடுத்து கொள்ளலாம். 

இதுவே தான் உபவாசத்திற்கும் பொருந்தும்.

நாம் அனைவரும் நம்மை இவ்வாறு பழக்கப் படுத்திக் கொள்வோமே .........

Tuesday, May 2, 2017

அசைவ உணவு உண்ணும் தாவரங்கள்


அசைவ உணவு உண்ணும் தாவரங்களைப் பற்றி அறிந்த பொழுது அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.......

நாம் பல கதைகளில் மனிதர்களை உண்ணும் தாவரங்களை பற்றி படித்திருப்போம். ஆனால் அப்படி பட்ட தாவரங்கள் இருக்கின்றன என்னும் பொழுது அதிச்சியாகத்தானே இருக்கும். 

இந்த வகையான தாவரங்களின் முக்கிய உணவே சிறு சிறு பூச்சிகள், எலிகள், வண்டுகள், தவளைகள் போன்றவையாகும். பிரபல விஞ்ஞானிகள் ஸ்டூவர்ட் மெக்பெர்சன், அலாஸ்டியர் ரொபின்சன் தலைமையில் ஆன குழு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள விக்டோரியா  மலைப்பகுதியில் உள்ள செடி கொடிகளை ஆராய்ச்சி பண்ணும்பொழுது இதை கண்டறிந்தார்கள்.


இந்த வகையான தாவரங்களை நாம் 21 ஆம் நூற்றாண்டில் தான் கண்டறிந்துள்ளோம். இந்த செடியின் இலைகள்தான் அந்த செடிக்கு வாய் போல் உள்ளது. அதன் மேல் அமரும் சிறு பூச்சிகள் மற்றும் எலி போன்ற உயிர் இனங்களை அப்படியே பிடித்து கொள்கிறது. அதன் பிறகு அவ்விலைகளில் சுரக்கும் ஒரு விதமான எண்ணெய் போன்ற பசையினால் அந்த உயிர் இனங்கள் தப்பவே முடியாது.. தாவரத்தில் சுரக்கும் எண்ணெய் போன்ற பொருள் [நொதிகள் (Enzymes - Proteases, ribonucleases, esterases, acid as well as alkaline phosphatases, phosphoamidase)] பூச்சிகளை செரிக்க செய்து அதற்கு தேவையான சத்துக்களை எடுத்துக்கொள்கிறது.

இதை படிக்கும் பொழுது உங்களுக்கும் ஆச்சரியம் வருகிறது அல்லவா ...........  


Tuesday, April 25, 2017

ஒரே மருந்து பல நோய்களுக்கு


ஒரே மருந்து பல நோய்களை குணப்படுத்தும் என்று கேட்டவுடன் மிகவும் ஆச்சரியமாக உள்ளதா ......

ஆம் ...உண்மைதான் ....

ஆனால் நம்முடைய பழமொழி "வரும் முன் காப்பதே மேல்" என்பதற்கு ஏற்ப முன்னாடியே எடுத்துக்கொண்டால் மிகவும் நல்லது.

எவ்வாறு தயாரிப்பது?

வெந்தயம் - 250 கிராம் 
ஓமம் - 100 கிராம் 
கருஞ்சீரகம் - 50 கிராம் 

மேலே உள்ள பொருட்களை சுத்தம் செய்து தனித்தனியாக வாணலியில் வைத்து இளஞ்சூட்டில் வறுத்து பின்பு ஆற வைத்து அப்புறம் பொடி பண்ணிக்கொள்ள வேண்டும். பொடி பண்ணிய பிறகு மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை காற்று புகாத கண்ணாடி குடுவையில் வைத்து கொள்ளவும். இதுவே ஆகச் சிறந்த மருந்து.

எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?

இரவு நேரத்தில் ஒரு தேக்கரண்டி அளவு வெது வெதுப்பான தண்ணீரில் (ஒரு டம்ளர் அளவு) போட்டு குடிக்க வேண்டும். இதை அருந்திய பிறகு எதுவும் சாப்பிடக்கூடாது.

சாப்பிடுவதினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

இதை தொடர்ந்து சாப்பிடுவதால் நம் உடலிலுள்ள நச்சுக்கள் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப் படுகிறது. 
  1. தேவையற்ற கொழுப்பு நம் உடம்பிலிருந்து வெளியேற்றப் படுகிறது.
  2. இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டம் ஏற்படுகிறது.
  3. இரத்த குழாய்களில் உள்ள அடைப்பு நீக்கப்படுகிறது மற்றும் இதயம் சீராக இயங்குகிறது.
  4. தோல் சுருக்கம் குறைந்து சருமம் மினுமினுப்படைகிறது.
  5. எலும்புகள் உறுதியடைந்து தேய்மானம் நீங்குகிறது.
  6. ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பல் உறுதி தன்மை அடைகிறது.
  7. கண்பார்வை தெளிவாகிறது.
  8. முடி நன்றாக வளர்ந்து கூந்தல் அழகு பெறுகிறது.
  9. நினைவாற்றல் கூடுகிறது.
  10. மலச்சிக்கல் நீங்குகிறது; மலச்சிக்கலே பல நோய்களுக்கு காரணி.
  11. கேட்கும் திறனை கூட்டுகிறது.
  12. மாதவிடாய் சம்பந்தமான நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
  13. பாலியல் சம்பந்தமான பிரச்சனைகள் நீக்கப்படுகிறது.
  14. நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
  15. இரண்டு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட நோய்கள் அனைத்தும் குணமாகிறது.
  16. செரிமாணம் சம்பந்தமான நோய்களும் குணப்படுத்தப் படுகிறது.

Saturday, April 22, 2017

தோப்புக்கரணம் (Super Brain Yoga)


விநாயகர் சுவாமியை இருகரம் கூப்பி வணங்கிவிட்டு அப்புறம் தோப்புக்கரணம் போடும் பழக்கம் நம் தமிழர்களிடையே பழங்காலம் முதல் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. நாமும் நம்முடைய பெரியவர்கள் சொன்னதை எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே பின்பற்றி வருகிறோம் அல்லவா...

இந்த பழக்கத்தைத்தான் மேற்கு உலகம் இப்பொழுது சூப்பர் ப்ரைன் யோகா (Super Brain Yoga) என்று அழைக்கிறது. இதற்காக பல ஆராய்ச்சிகளை பண்ணி இப்பழக்கம் நம் மூளையில் உள்ள செல்களை தூண்டி நம் நினைவாற்றலை பன்முகப்படுத்துகிறது என்று கண்டறிந்து உள்ளார்கள். இதைத்தான் நம் ஆசிரியர்கள் தம்முடைய மாணவர்களுக்கு தண்டனை என்ற பெயரில். செய்ய சொன்னார்கள். நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சமயம் இந்த தண்டனையை அனுபவித்து இருப்போம். அப்பொழுது இதை மிகவும் அசிங்கமாக எண்ணி கூனி குறுகி இருப்போம். இது யாருடைய தவறு? அப்பொழுதே நம் ஆசிரியர்கள் அதற்கான விளக்கத்தை கொடுத்து இருந்தால் நாம் இதை ஒரு யோகாவாக செய்ய பழகி இருப்போம். இப்பவும் இது ஒன்றும் தாமதமில்லை நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து ஒரு பழக்கமாக கொண்டு வருவோம்.

இதை எப்படி செய்வது?

  1. இடது கையை கொண்டு வலது காதை படத்தில் உள்ளது போன்று பிடித்துக் கொள்ள வேண்டும். கட்ட விரல் வெளிப்புறம் (முன்னாடி தெரிவது மாதிரி) இருக்க வேண்டும்;  ஆள் காட்டி விரல் உட்புறம் இருக்க வேண்டும்.
  2. வலது கையை கொண்டு இடது காதை பிடித்துக்கொள்ள வேண்டும். இடது கை உள்புறமாகவும் வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும்.
  3. இவ்வாறு காது மடலை பிடித்துக்கொண்டு முட்டியை மடித்து உட்கார்ந்து (குத்த வைப்பது போன்று) எழுந்திருக்க வேண்டும். இது மாதிரி 10 முதல் 20 முறை செய்ய வேண்டும். 
  4. இவ்வாறு செய்வதற்கு முன்பு நாம் நம்முடைய கால்களை தோள்பட்டை அளவுக்கு அகற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
  5. முக்கியமாக உட்காரும் பொழுது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்; எழுந்திருக்கும் பொழுது மூச்சை வெளியில் விடவேண்டும்.
இவ்வாறு செய்வதினால் ஏற்படும் நன்மைகள் என்ன?


நம் உடம்பில் உள்ள 7 சக்கரங்களில் முதல் சக்கரம் மூலாதாரம் சக்கரம் ஆகும். இது நம்முடைய ஆற்றலின் மையப்பகுதியாகும். இப்பயிற்சியை செய்வதன் மூலம் நம்முடைய மூலாதார சக்தியை எழுப்பி அதை ஆக்கினைக்கு கொண்டு வந்து மனதை ஒருநிலை படுத்த முடியும். அவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய படிக்கும் திறன் மற்றும் நினைவாற்றல் திறனை அதிகரிக்க முடியும். 

அல்ஸைமர் (Alzheimer) மற்றும் ஆட்டிசம் (Autism) போன்ற நோய்களை கட்டுப்படுத்தவும் , குறைக்கவும் இப்பயிற்சி உதவும்.

நம்முடைய மூளையை மேலிருந்து பார்க்கும் பொழுது அது இரண்டு பாகங்களாக தெரியும்.


இடது பக்கமுள்ள மூளை நம்முடைய வலதுபுற உடல் உறுப்புக்களை கட்டுப்படுத்தும் அதுபோல் வலது மூளை இடப்புறம் உள்ள உடல் உறுப்புக்களை கட்டுப்படுத்தும். அதனால் நம்மில் பலர் இடக்கை பழக்கமுள்ளவர்களாக இருப்பதை பார்க்கலாம்.

நம் காதுக்குள் காக்லியா என்ற பாகம் உள்ளது, அது நம்முடைய உடலை சமநிலைப்படுத்தும். அப்பகுதியில் ஏதாவது பிரச்சனை என்றால் நமக்கு தலைசுற்றல் வாந்தி போன்ற உபாதைகள் வரும். நாம் இப்பயிற்சியின் மூலம் இதை சரி செய்யலாம்.


அது மட்டுமல்லாமல் நம்முடைய காது மடல் நாம் நம் தாயின் கருவறையில் இருப்பது போன்ற தோற்றத்தை கொண்டதாகும். அதாவது தலை கீழ்புறமாகவும் கால் மேற்புறமாகவும் உள்ள அமைப்பாகும். 


ஆகையால் நம்முடைய காது மடலை குறிப்பிட்ட அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடல் உறுப்புக்களை சரியான விகிதத்தில் வேலை செய்ய வைக்கலாம். அதற்கு ரிஃப்ளெக்ஸ்லாஜி (Reflexology) என்று பெயர்.


நம்முடைய சம்பிரதாயத்தில் குழந்தைக்கு ஒரு வயது ஆனபின்பு காது குத்தும் பழக்கம் உள்ளது, அது ஏன் தெரியுமா?